Followers

Followers

Saturday 12 March 2016

க🌺🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!
🌺🌺💐💐💐🌺🌺
👍கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..
🌺🌺💐💐💐🌺🌺
👉🏾முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!
🌺🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
👉முயல்வோம்..
வெற்றி பெறுவோம். 🌺🌺💐💐💐🌺🌺

2 comments:

  1. ஒவ்வொன்றும் அருமை. அழகாகக் கோர்த்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அப்பாடீ..., இன்றுதான், தங்கள் தளத்தில் என்னால் Follower ஆக முடிந்துள்ளது.

    உங்களைக் காணாமல் ஏங்கும் ஓர் பதிவு: http://gopu1949.blogspot.in/2016/03/5.html

    ReplyDelete
  2. வாங்க ஸார். ஃபாலோவராக இணைத்துக்கொண்டதற்கும பதிவுக்கு கருத்துக்கும் சொன்னதற்கும் நன்றி

    ReplyDelete