Followers

Followers

Tuesday 31 January 2017

விலைவாசி.....

டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க... சரியா?

டீச்சர் : (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...

பையன்:(வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...

அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க.... சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.

*அப்பா* வந்ததும்: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...

*அப்பா*: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை... என்ன செய்யிறது?... சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க....
=========================

விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..

3 comments:

  1. //விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..//

    நல்லாவே புரியுது. :)

    கொள்ளைகளும் ஊழல்களும் பள்ளியிலிருந்தும், வீடுகளிலிருந்தும் தான் ஆரம்பித்து நாடு பூராவும் நன்கு பரவியுள்ளது என்பது நல்லாவே புரியுது.

    புரிய வைத்த புதுமைப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete