Followers

Followers

Wednesday, 22 March 2017

பாசம்..


*அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது*

வசதியாகத்தான்
இருக்கிறது மகனே…
நீ
கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்.
பொறுப்பாய்
என்னை
ஒப்படைத்து விட்டு
வெளியேறிய
போது,
முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில்
விட்டு விட்டு
என் முதுகுக்குப்
பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில்
எழுகிறது!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில்,
அன்று உனக்காக
நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல்
போனாலும்,
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்கு
மனம்
மகிழ்ச்சியடைகிறது.
நீ விடுதியில்
தங்கிப் படித்த
காலத்தில்
உன்னைப் பார்க்க
வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்,
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க
மறுத்ததன்
எதிர்வினையே இது
இப்போது அறிகிறேன்.

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக
சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப்
பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்.
ஆயினும்
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு;

நான்
கற்றுக்கொடுத்தேன்
உனக்கு;
வாழ்க்கை இதுதான் என.
நீ கற்றுக்
கொடுக்கிறாய்
எனக்கு,
உறவுகள்
இதுதானென்று!

இந்தக் கவிதையைப்
படித்ததும் கண்கள்
குளமாகின்றது.

தாய் தந்தை மீது பாசம்
உள்ள
ஒவ்வொருவரும்
உணறவேண்டிய விஷயம் இது.





Monday, 20 March 2017

ராம நாம மகிமை..

வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.




அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.

Sunday, 19 March 2017

முட்டாள்

காவலர்:
யோவ் உன் பேர் என்னயா?
குடிமகன்:
என் பேரு 'ராஜேஷ்'ங்க.
ஆதார் அட்டைல 'ருஜேஷ்'ங்க.
ரேசன் கார்டுல 'ரஜேஷ்'
ஸ்கூல் டீசியில 'இராஜேஷ்'
டிரைவிங் லைசென்ஸ்ல 'ரிஜேஷ்'ங்க.
காவலர்:
யோவ், என்னயா பேர கேட்டா,
ஒலரிகிட்டு இருக்கே.
குடிமகன்:
நான் ஒலரலைங்க சார்!
நம்ம நாட்ல அரசு ஆவணங்களில்
நம்ம பெயரை இப்படித்தான் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு
எழுதி வைக்கிறாங்க.
காவலர்:
என்னயா இது?
ஆதார் அட்டைல
உன் போட்டோவே இல்ல.
குடிமகன்:
நல்லா உத்துப் பாருங்க சார்,
அதுல என் கண்ணு மட்டும் தெரியும்.
நம்ம டெக்னாலஜி அப்டி.
காவலர்:
உன் லைசென்ஸ்ல
கையெழுத்த காணோம்?
குடிமகன்:
நல்லா பாருங்க சார்,
கை ரேகை மாதிரி
ரெண்டு மூனு கோடு போகும்.
காவலர்:
ஆமா நீ எதுக்கு ஓவர் ஸ்பீடுல வந்தே?
குடிமகன்:
சார், நான் வச்சிருக்கிறது TVS -50.
இது 40 க்கு மேல போகாதுங்க.
காவலர்:
ரேஸன் கார்டுல உனக்கு வயசு
12 னு போட்டிருக்கு?
எப்டி நீ வண்டி ஓட்டலாம்?
குடிமகன்:
அய்யோ ஆபிசர்,
இது 10 வருஷத்துக்கு முன்னாடி
தமிழக அரசு கொடுத்த ரேசன் கார்டு.
இப்ப வரைக்கும் புது ரேசன் கார்டு தரவே இல்ல.
இப்ப எனக்கு 22 வயசு சார்.
காவலர்:
ரோடு டேக்ஸ்லாம்
ஒழுங்கா கட்டிருக்கியா?
குடிமகன்:
நம்ம ஊர்ல எங்க சார் இருக்கு ரோடு?
நீங்க ரோட காட்டுங்க
நாங்க டேக்ஸ கட்டுறோம்.
காவலர்:
இது சரிவராது.
நீ கோர்ட்ல வந்து பேசிக்கோ.
குடிமகன்:
ஐயோ வேணாம் சார்.
வாய்தா வாய்தானு
நாலு வருஷத்துக்கு இழுத்தடிச்சு அப்புறம் கேஸயே
தள்ளுபடி பண்ணிருவாங்க.
நீதி மன்றத்துல எப்ப சார்
எங்கள மாதிரி ஆளுங்களுக்கு
நீதி கிடச்சிருக்கு?
காவலர்:
இவ்ளோ வெவரமா பேசுறியே,
நீ என்ன படிச்சிருக்க?
குடிமகன்:
பாத்தீங்களா சார்,
நான் படிச்சவன்கிறதாலதான்
தெளிவா கேக்குறேன்னு
நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க.
படிச்சா வெவரம் வந்திரும்னு தெரிஞ்சுதான் அரசு
சில அரசு பள்ளிகளை மூடிட்டு,
மீதி இருக்கிற பள்ளிகளைக்
கவனிக்காம வச்சிருக்காங்க.
நாம முட்டாளா
இருக்குற வரைக்கும்தான்
அவங்களால
ஆட்சி செய்யமுடியும்.
காவலர்:
சரியா சொன்னே தம்பி.
உன்ன மாதிரியே எல்லாரும்
தெளிவா இருந்தா
நாங்க ஏன் உங்கள
தொல்ல பண்ண போறோம்.
சரி தம்பி நீ கெளம்பு.
பாத்துப் போப்பா.

Thursday, 16 March 2017

லீவு நல்லது

#லீவு_நல்லது

"ஒரு குழந்தை டெய்லி School க்கு போயி 100% Attendance வாங்கி, வருச கடைசியில ஒரு கோப்பை வாங்குறது பெருமையில்லை!!!

கல்யாணம், காதுகுத்து, இழவு, திருவிழா ன்னு எல்லா இடத்துலேயும் கூட்டிட்டு போங்க!!
அப்ப தான் நாகரிகம், பண்பாடு தெரியும்!!
உறவுகளின் வலிமை, ஒற்றுமை, விட்டுக்குடுத்தல், அழுகை, சிரிப்பு ன்னு நிறைய தெரிய வரும்!!!

இந்த சமூகம் ஒரு நாளில் கற்றுக் கொடுப்பதை, அந்த விடுமுறை எடுக்காத நாளில் அந்த வகுப்பறை கற்றுக் கொடுத்து விடாது!!!"

Wednesday, 15 March 2017

துன்பம்

ஒரு குட்டிக்கதை

ஒரு கட்டுமான எஞ்சினியர் 13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…
.
ஒரு முக்கியமான வேலை…
.
கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..
.கொத்தனார் வேலை
மும்முரத்தில்,
சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…
.
போனை எடுக்கவில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே
பார்க்கவில்லை…
.
 இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில்
 இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…
.
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…
.
ஒரு பத்து ரூபாய்
 நோட்டை எடுத்து,
மேலே இருந்து,
கொத்தனார் அருகில் போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த கொத்தனார்,
அதை எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…
.
 ஆனால்சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்..
.
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…
.
 அதையும்
 எடுத்து சட்டைப் பையில் வைத்துக்
 கொண்டு…
கொத்தனார் மும்முரமாக
 இருந்தார்…
.
எஞ்சினியர்.. பொறுமை
இழந்து
ஒரு சின்ன கல்லை எடுத்து,
 கொத்தனார் மீது போட்டார்…
.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல
 வலியோடு, மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும்
அப்படித்தான்….

மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...

இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...

அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...

ஆனால் ஒரு
 துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.

      துன்பங்கள் வரும் நேரம்…
இறைவன்
 உன்னைத் தேடி அழைக்கும் நேரம்
 என்று பொருள்.


Tuesday, 14 March 2017

இங்க்லீஷ் படும்பாடு...



``` Effect of Whatsapp on the English language

Peter & Laxmi  on Whatsapp :

Peter : Hi dear.

Laxmi : ✋

Peter : How are you .??

Laxmi : 😊👍

Peter : missing me..?

Laxmi : 😜😉

Peter : I'm not feeling well...

Laxmi : 😱

Peter : How was your day..???

Laxmi : 👌

Peter : are you busy.??

Laxmi : ✔

Peter : Why ?? What are you doing ??

Laxmi: 💄💅

Peter : is there anyone near you..??

Laxmi : ❌

Peter : why don't you reply in words? Why are you using smiley faces?

Laxmi :- 😥😡

Peter : I heard you failed in English ??

Laxmi:
Who telled you ? It is unpossible.. I went to saw the resalt yestathey...
I Passed away

Peter :
hmmm lets go back to smileys pls
😳😳😳

Laxmi:-
ok dear,
God blast you.
😂😝😂😆```


கம்ப்யூட்டர்எஞ்சினியர் படம் எடுத்தா.....

ஜிமெயில்     ஸன் ஆஃப்...ஈமெயில்

விண்டோஸ்  தாண்டி வருவாயா

ராம்  தேடிய  மதர்  போர்டு

7ஜி  பி   கூகுள்  காலனி

எனக்கு 20 எம்.பி,  உனக்கு  18எம்பி..

புரோக்ராம்ஸ்  ஆயிரம்..

ஒரு மவுஸின் கதை..

மானிட்டருக்குள்  மழை..

எல்லாம்  பிராசசர்  செயல்

நான்  கிராபிக்ஸ் டிஸைனர் அல்ல.

சி மனசுல  சி++