Followers

Followers

Saturday, 22 October 2016

டவுட்டு


அண்ணே ஒரு டவுட்டண்ணே..

அட அப்படி என்னடா டவுட்டு.?

இல்லண்ணே.. இந்தகாலத்து பசங்க அம்மாவ "mum" அப்படிதானே கூப்பிட்றாங்க.!

ஆமாடா.. அதுக்கு இப்போ என்ன.?

அப்படி பாத்தா பெரியம்மாவ "maxi-mum" னும் சின்னம்மாவ "mini-mum" னுதானே கூப்பிடணும்..?

அய்யய்யோ...!!!😳😳😁😁😁



Thursday, 20 October 2016

ஜெய் ஹிந்த்...

Jai hind
படித்ததில் பிடித்தது
""""""""""""""""""""""""""""""""""
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..

விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..

எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு எல்லையில் பாதுகாப்பு பணி ...

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு..
மதிய உணவு தயார்.. சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க...பின்னால் ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்..

நீ சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி.. அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவு..
ஆமாம்..உண்மை.

இதை கேட்ட பொழுது.... மனம் வலித்தது..
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..

அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..

நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்.. இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து , என் கைகளை பிடித்து குலுக்கி, நான் முன்பு ஏர் போர்ஸ் பைலட்டாக இருந்தேன்..
ஒரு நாள் எனக்கும் ஒருவர் உணவு வாங்கி கொடுத்தார். இது ஒரு கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே என்று சொல்லி சென்றார்.

ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..

விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...

இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை
 நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..

காரில் ஏறி அமர்ந்தேன்.. ஒரு ஆத்ம திருப்தி..

இவர்கள் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு.. உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி, கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை தாக்கியது....

நண்பர்களே.....
    இது வெறும் கதையல்ல., சிந்திக்க வைக்கும் உண்மை....

ஜெய் ஹிந்த் *

Wednesday, 19 October 2016

ஞாபகம் வருதே...

ஞாபகம் இருக்கா. 20 years back to school time.👼

🚪"டக்" "டக்" யாரது..?

😎 "திருடன்"
"என்ன வேனும் .?

🎊 " நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??

♻ " பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??

🍏" மா" பச்சை...
"என்னம்மா..?

💇 " டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?

💯 " கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?

🏠 " வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??

🏫 " மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?

🏢 " மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??

😔 " பழனி மொட்ட...!
"என்ன பழனி..??

🍪 " வடபழனி...!!
"என்ன வட..?

🐢 " ஆமை வட..!!
"என்ன ஆமை..?

🚣🏻 🐢 "கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!

🚣🏻 " த்திரி குளம்..!!
"என்ன திரி..??

🔥 " விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??

👊 " குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/

🏯🏣🏰 சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...

💃😿🏃 அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்

👬👭 நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்

🏠நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்

👕 வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்

✒✏ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக

👖👖இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்

என்னிடம் ✏ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

✒புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்

வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
📖 புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்

நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
🎨 மை தெளித்து உதவிய தருணம்

போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)

சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
💃🏃 துள்ளி குதித்திருப்போம்

👣எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.🚸🚸🚸

விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால்😿 வருத்தப்படுவோம்

🍞🍚🍣🍛🍔 அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்

🕘 ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
🕓 நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!


Monday, 17 October 2016

கொஞ்சம்....ஓ.......வ......ர்........

கோழி முட்டைக்கும்...🐓
பேண்ட் ஜிப்புக்கும்...👖

ஒரு சிறப்பான ஒற்றுமை உண்டு...!!!

ரெண்டையும் Open பன்னுனா...

உள்ள இருந்து குஞ்சு வரும்...!!🐣🐥

இத சொன்னா...
அடிக்க வர்ராங்க...!! பெண்களின் மார்பு ஒரு பேப்பர் போல அதில் கவிதை எழுதியவர்கள் விட அதை கசக்கியவர்கள் தான் அதிகம்.😀😀😀


மலை"க்கும்,"பெண்"ணுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

மலை:- ஏறும் போது களைப்பா இருக்கும்,இறங்கும் போது சுகமா இருக்கும்.!
பெண்:-"ஏறும்" போது சுகமா இருக்கும்,இறங்கும் போது களைப்பா இருக்கும்..!!


 இன்றைய பெண்களுக்கு
"தவறு" செய்யும் ஆண்களை விட,"தவறாமல்" செய்யும் ஆண்களை தான் மிகப் பிடிக்கும்..!!


 பெண்கள் "குத்து"விளக்கு மாதீிரி,ஆணகள் தான் அதுக்கு "எண்ணெய்"


கோன் ஐஸ்கிரீம் சாப்டுறது என்னவோ பெண்கள் தான்.,
சளி பிடிப்பதென்னவோ ஆண்களுக்கு..!
 #‎சிந்தோ சிந்துனு சிந்த வைக்கிறாங்க..!!😒😂

பொண்ணுங்கள காதலிக்கும் போதே வாந்தி எடுக்க வச்சிரணும், இல்லைனா கழட்டி விட்டுட்டு டாஸ்மாக்ல நம்மள வாந்தி எடுக்க வச்சிருவாங்க..!
பூக்களில் கூட பெண்ணாதிக்கம்.,
"தண்டு" கீழே "பூ" மேலே..!!!
இந்த பொண்ணுங்களும், செல்போனும் ஒன்னுதான்.,
"தண்ணி" உள்ளே போய்ட்டா கெட்டுப் போய்டும்..!!!



இந்த👖 பேண்ட்டும்,பொண்ணுங்களும் ஒன்னுதாங்க.,
ரெண்டையுமே காலை "விரிச்சி" தான் "போட" முடியும்..!!😜😜😜
என்னதான் ஓடுற
 பாம்பை மிதிக்கிற
திறமை பசங்களுக்கு இருந்தாலும் தூங்குற
பாம்பை எழுப்புற
திறமை
பொண்ணுங்ககிட்ட தான் இருக்கு 😝😛😜

Purinja forward paniko!!

Friday, 7 October 2016

ஆன்மாவின் குரல்


வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.



Wednesday, 5 October 2016

*படித்ததில் வலித்தது*

கண்ணீரை வரவழைத்த உண்மை சம்பவம்....

நாட்டில் ஏழைகள் ஒழிய வேண்டுமா?ஜாதி ஒழிய வேண்டுமா?
திருச்சிக்கு மகனை ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன்,.. அங்கு நல்ல உடையனிந்து ,நகையனிந்து காரில் கணவன் மனைவி மற்றும் மகனுடன் வந்து இறங்கினார்கள்,.அரசு வேலையில் இருவரும் இருக்கிறார்களாம்,அவர்கள் அமர்ந்தார்கள்,,அவர்களுக்கு அருகில் வயதான தம்பதிகள் சாதாரன உடையில் காலில் செருப்பு கூட இல்லாமல் ,தாய் தந்தையை இழந்த தனது பேரனுடன் ,அமர்ந்திருந்தனர்..அலுவலக சிப்பந்தி ஒவ்வொருவராக அழைத்தார்,,பிரகாஷ்,,785.மார்க்,என்றார்,காரில் வந்தவர்கள் எழுந்து முதல்வர் அருகில் சென்றனர் .
அவர் கோப்புகளை பார்த்துவிட்டு நீங்கள் SC,,கோட்டாவில் வருகிறீர்கள் எனவே தங்கும் விடுதிக்கும் சேர்த்து -2500-ரூபாய் கட்டி சேர்ந்து விடுங்கள் என்றார்,கட்டிவிட்டார்கள்,.அவர்கள் கிளம்பும்போது முதல்வர் உங்களுக்கு- 14000-ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் வாங்கிக்கொள்ளுங்கள்,என்றார் அவர்கள் சரி என்று கூறி சென்று விட்டனர்.
அடுத்து பிரவீன்-960-மார்க் என்று அழைத்தார்கள்,அப்போது அந்த வயதான தம்பதிகள் தங்கள் பேரனுடன் முதல்வர் அருகில் சென்றனர்,அப்போது முதல்வர் பெரியவரே நீங்கள் BC,-எனவே விடுதிக்கும் சேர்த்து -98000-ரூபாய் கட்டிவிடுங்கள் என்று கூறினார்..உடன் அவர் தன் இடுப்பிலிருந்த பணத்தை எடுத்து,என்னிப்பார்க்க கூட முடியாமல் நடுங்கும் கைகளால் அலுவலக உதவியாளரிடம் கொடுக்க,அவர் அதை எண்ணிப்பார்த்துவிட்டு ஆயிரம் ரூபாய் குறைகிறது என்று சொல்ல ,பெரியவர் மனைவியை பார்க்க அந்த வயதான பெண்மனி தனது சுருக்கு பையிலிருந்து நடுங்கும் விரல்களால் சில்லரை நோட்டுகளை எண்ணிக் கொடுக்க .பையனை சேர்த்துவிட்டு அந்த தம்பதிகள் வெளியில் செல்லும்போது,அந்த பெரியவர் தன் மனைவியின் தோளை தொட்டு ,பாக்கியம் பஸ்ஸுக்கு பணமிருக்கா என்று கேட்டார்,.
இதை பார்த்தவுடன் ,ஆயிரம் சிறை கம்பிகளையும்,பிரச்சினைகளையும் பார்த்து கலங்காத கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
இதற்காகத்தான் ஜாதிக்கொரு நீதியா?



Monday, 3 October 2016

தத்துவம்

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

“இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.

பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?
என்று கணவர் கேட்டபோது

இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி

“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.

வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

நல்லதையே செய்வோம் நல்லோராய்
வாழ்வோம்