Followers
Followers
Thursday, 22 June 2017
பெண்.....
புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.!இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர். அன்றே கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை…!
ஆனால் அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது. அதனால் கதவை திறக்க வில்லை அவன். அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய் விட்டனர்.
கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா, அப்பா வந்தனர் கதவை தட்டினார்கள். இருவரும்ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது என்று சொல்லி கதவை திறந்தாள். ஆனால் கணவன் ஒன்றும் சொல்ல வில்லை. வருடங்கள் உருண்டோடின….!
இரண்டு ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான். அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஏன் பெண் குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள் … ?
அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவை திறக்க ஒரு பெண் பிறந்துவிட்டாள் என்றான் கர்வத்துடன்….!!!
👉.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை…!
ஆனால் அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது. அதனால் கதவை திறக்க வில்லை அவன். அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய் விட்டனர்.
கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா, அப்பா வந்தனர் கதவை தட்டினார்கள். இருவரும்ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது என்று சொல்லி கதவை திறந்தாள். ஆனால் கணவன் ஒன்றும் சொல்ல வில்லை. வருடங்கள் உருண்டோடின….!
இரண்டு ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான். அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஏன் பெண் குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள் … ?
அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவை திறக்க ஒரு பெண் பிறந்துவிட்டாள் என்றான் கர்வத்துடன்….!!!
👉.
Wednesday, 21 June 2017
கவலை
🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
Tuesday, 20 June 2017
மனிதம்
இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.
அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,
“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான்.
ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,
“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?
இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...
இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
கணவன் அமைதியாகச் சொன்னான்,
“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”
இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.
ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.
அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...
#இன்றையசூழ்நிலையில்............
மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;
. . (படித்ததில் பிடித்தது)
அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,
“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான்.
ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,
“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?
இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...
இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
கணவன் அமைதியாகச் சொன்னான்,
“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”
இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.
ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.
அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...
#இன்றையசூழ்நிலையில்............
மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;
. . (படித்ததில் பிடித்தது)
Friday, 16 June 2017
பாஸிடிவ் திங்கிங்
Think positive
Be happy,,,,🤷♂🤷♂🤷♂
ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:🤕🤕
சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை.
நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது.😚
அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement.😩😩😩
அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்.😭😭😭
அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.🤒🤒😷🤕
என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.🤧🤧
அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார்.✍
பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.✍✍✍
சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன்.🙌
60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுவேன்.👍👍
என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் தஞ்சம் புகுந்தார்.👍👍
அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும் புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்🤷♂🤷♂
இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்.கடவுள் என் மீது தன் கருணையை பொழிந்தார்.☺☺
படித்த கணவர் நன்றி பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.☺
என்ன அற்புதமான மனதிற்கு வவிவூட்டும் வாக்கியங்கள்.☺☺☺☺
ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.☺☺
Be happy,,,,🤷♂🤷♂🤷♂
ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:🤕🤕
சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை.
நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது.😚
அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement.😩😩😩
அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்.😭😭😭
அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.🤒🤒😷🤕
என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.🤧🤧
அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார்.✍
பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.✍✍✍
சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன்.🙌
60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுவேன்.👍👍
என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் தஞ்சம் புகுந்தார்.👍👍
அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும் புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்🤷♂🤷♂
இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்.கடவுள் என் மீது தன் கருணையை பொழிந்தார்.☺☺
படித்த கணவர் நன்றி பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.☺
என்ன அற்புதமான மனதிற்கு வவிவூட்டும் வாக்கியங்கள்.☺☺☺☺
ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.☺☺
Wednesday, 7 June 2017
முக்கியம்
வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் .. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..? நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? ஷ்ஷு.... அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? என்ன கேள்வி இது..? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... " அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? " இம்முறை அம்மாவிடமிருந்து பதில் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
Wednesday, 24 May 2017
சில. வேண்டும்கள்
இன்றைய தேடல்
உள்ளம் கணக்கும் போது உறுதுணையாக உள்ளம் வேண்டும்.....
அழுது புலம்பும் போது ஆறுதல் கூறும் அன்பு வேண்டும்....
உயர பறக்கும் போது நூலின் நன்றி மறவாது இருக்க வேண்டும்.....
உதவி எண்ணும் போது அன்புடையேர் கண்ணேல்லம் காண வேண்டும்.....
கொடுப்பவர் பணம் காண மனம் காணும் உள்ளம் வேண்டும்.....
இல்லாமை அழிந்திட வேண்டும்.....
வறுமை ஒழிந்திட வேண்டும்.....
உள்ளம் கணக்கும் போது உறுதுணையாக உள்ளம் வேண்டும்.....
அழுது புலம்பும் போது ஆறுதல் கூறும் அன்பு வேண்டும்....
உயர பறக்கும் போது நூலின் நன்றி மறவாது இருக்க வேண்டும்.....
உதவி எண்ணும் போது அன்புடையேர் கண்ணேல்லம் காண வேண்டும்.....
கொடுப்பவர் பணம் காண மனம் காணும் உள்ளம் வேண்டும்.....
இல்லாமை அழிந்திட வேண்டும்.....
வறுமை ஒழிந்திட வேண்டும்.....
Tuesday, 23 May 2017
மெடிகல் லீவு.....
வாசுதேவன்-தேவகி இவர்களின் 8வது குழந்தையால் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்த கம்சன் அவர்களை சிறையிலடைத்து ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், அதனை தன் கையாலேயே கொன்று பழி தீர்த்துகொண்டானாம். என்று ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போ லாஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்திருந்த நம்ம மாணிக்கம் எந்திருச்சு,
"டீச்சர்....கம்சனுக்குதான் அந்த 8வது குழந்தையால் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு போச்சே, அப்புறம் ஏன் வாசுதேவன்-தேவகி ரெண்டு பேரையும் ஒரே சிறையில அடைச்சி வச்சான் ....?" அப்படின்னு கேட்டுச்சு...
*அன்னைக்கி மெடிக்கல் லீவ்ல போனவங்க தான் அந்த டீச்சர் இன்னும் வரல*
அப்போ லாஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்திருந்த நம்ம மாணிக்கம் எந்திருச்சு,
"டீச்சர்....கம்சனுக்குதான் அந்த 8வது குழந்தையால் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு போச்சே, அப்புறம் ஏன் வாசுதேவன்-தேவகி ரெண்டு பேரையும் ஒரே சிறையில அடைச்சி வச்சான் ....?" அப்படின்னு கேட்டுச்சு...
*அன்னைக்கி மெடிக்கல் லீவ்ல போனவங்க தான் அந்த டீச்சர் இன்னும் வரல*
Monday, 22 May 2017
அப்பா....
மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.
‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. ”வேலை கிடைத்ததும் எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.
நேர்காணலுக்கு கிளம்பினான். “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமான பதில் சொல்” என்று வழியனுப்பி வைத்தான் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது. குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக
மாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் ஒளிந்து கொண்டிருந்தது. “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. “நமக்கு வேலை
கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். வருத்தத்துடனேயே அதை காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.
இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை. கலக்கத்துடனே
நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்களை வாங்கிப் பார்த்த அதிகாரி,
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்துவிட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன். ”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா
மூலம் கண்காணித்தோம்.
இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.
அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
அப்பாவின் மீதுள்ள எரிச்சல் தணிந்தது. வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
மகன்.
அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் !!!😁😁
பிடிக்கவில்லை.
‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. ”வேலை கிடைத்ததும் எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.
நேர்காணலுக்கு கிளம்பினான். “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமான பதில் சொல்” என்று வழியனுப்பி வைத்தான் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது. குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக
மாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் ஒளிந்து கொண்டிருந்தது. “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. “நமக்கு வேலை
கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். வருத்தத்துடனேயே அதை காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.
இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை. கலக்கத்துடனே
நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்களை வாங்கிப் பார்த்த அதிகாரி,
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்துவிட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன். ”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா
மூலம் கண்காணித்தோம்.
இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.
அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
அப்பாவின் மீதுள்ள எரிச்சல் தணிந்தது. வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
மகன்.
அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் !!!😁😁
Sunday, 21 May 2017
சாதனையாளன்
முதல் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அதிர்ஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அனுபவசாலி
நான்காம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ தைரியசாலி
அதற்கு மேலும் வெற்றி பெற்றால்
நீ தான் சாதனையாளன்....
நீ அதிர்ஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அனுபவசாலி
நான்காம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ தைரியசாலி
அதற்கு மேலும் வெற்றி பெற்றால்
நீ தான் சாதனையாளன்....
டி.வி....மொபைல்...
Wife - Tv மாதிரி
Girl frd - mobile மாதிரி
வீட்டுல இருக்கும் போது TV use பண்ணுங்க,
வெளியே போகும்போது mobile use பண்ணுங்க,
Tv உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா mobile எப்பவுமே புடிக்கும்,
TV free யா use பண்ணிக்கலாம், ஆனா mobile charger போடலைன்னா,,,
top up
பண்ணலைன்னா,,,
அவ்வளவுதான் ,
TV பெரிசா , பல்லக்காட்டும். பழச இருக்கும் ,,,ஆனா mobile அழகா slim மா இருக்கும் ,
TV க்கு பராமரிப்பு செலவு கம்மியா இருக்கும் , ஆனா mobile க்கு அப்படி கிடையாது ,உங்க பர்ஸூக்கு சாவுமணி அடிக்காம விடாது ,
TV க்கு remote இருக்கும் ,
ஆனா mobile க்கு கிடையாது ,,,,
முக்கியமா mobile க்கு 2 வகையான uses இருக்கும் , ஒன்னு நீங்க பேசலாம் ,,,,மற்றொன்று கேட்கலாம் !
ஆனா TV யில் நீங்க பேச முடியாது அது சொல்றததான் கேட்கோனும்,,,!
கடைசியா ஒன்னே ஒன்று ,,,,
TV யில virus கிடையாது ,,,,
ஆனா mobile யில virus உண்டு,,,,
so be careful😜
Girl frd - mobile மாதிரி
வீட்டுல இருக்கும் போது TV use பண்ணுங்க,
வெளியே போகும்போது mobile use பண்ணுங்க,
Tv உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா mobile எப்பவுமே புடிக்கும்,
TV free யா use பண்ணிக்கலாம், ஆனா mobile charger போடலைன்னா,,,
top up
பண்ணலைன்னா,,,
அவ்வளவுதான் ,
TV பெரிசா , பல்லக்காட்டும். பழச இருக்கும் ,,,ஆனா mobile அழகா slim மா இருக்கும் ,
TV க்கு பராமரிப்பு செலவு கம்மியா இருக்கும் , ஆனா mobile க்கு அப்படி கிடையாது ,உங்க பர்ஸூக்கு சாவுமணி அடிக்காம விடாது ,
TV க்கு remote இருக்கும் ,
ஆனா mobile க்கு கிடையாது ,,,,
முக்கியமா mobile க்கு 2 வகையான uses இருக்கும் , ஒன்னு நீங்க பேசலாம் ,,,,மற்றொன்று கேட்கலாம் !
ஆனா TV யில் நீங்க பேச முடியாது அது சொல்றததான் கேட்கோனும்,,,!
கடைசியா ஒன்னே ஒன்று ,,,,
TV யில virus கிடையாது ,,,,
ஆனா mobile யில virus உண்டு,,,,
so be careful😜
Friday, 19 May 2017
தவறே இல்லை.
சரி என்று வரும் வரை
தப்புகள் தவறே இல்லை
தெளிவு வரும் வரை
குழப்பங்கள் தவறே இல்லை
அழகு வரும் வரை
பருக்கள் தவறே இல்லை
உறவு வரும் வரை
தனிமைகள் தவறே இல்லை
சேர்க்கை வரும வரை
பிரிவுகள் தவறே இல்லை
பொறுப்பு வரும் வரை
குறும்புகள் தவறே இல்லை
காதல் வரும் வரை
ஏமாற்றம் தவறே இல்லை
குடும்பம் வரும் வரை
சுதந்திரம் தவறே இல்லை
வாய்ப்புகள் வரும் வரை
காத்திருப்பு தவறே இல்லை
வெற்றி வரும் வரை
தோல்விகள் தவறே இல்லை
தப்புகள் தவறே இல்லை
தெளிவு வரும் வரை
குழப்பங்கள் தவறே இல்லை
அழகு வரும் வரை
பருக்கள் தவறே இல்லை
உறவு வரும் வரை
தனிமைகள் தவறே இல்லை
சேர்க்கை வரும வரை
பிரிவுகள் தவறே இல்லை
பொறுப்பு வரும் வரை
குறும்புகள் தவறே இல்லை
காதல் வரும் வரை
ஏமாற்றம் தவறே இல்லை
குடும்பம் வரும் வரை
சுதந்திரம் தவறே இல்லை
வாய்ப்புகள் வரும் வரை
காத்திருப்பு தவறே இல்லை
வெற்றி வரும் வரை
தோல்விகள் தவறே இல்லை
Thursday, 18 May 2017
நீ. நீயாகவே. இரு..
*நீ . . .நீயாக இரு !*
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*
கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*
காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீயாகவே இரு !*
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*
கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*
காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீயாகவே இரு !*
Friday, 14 April 2017
பீப்பீ.......
ஒரு பேரூந்து நிலையத்தில் ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் பேசியதைக் கேட்டவுடன் ஒரே சிரிப்பு..
அப்பா...எனக்கு பீப்பியும்..விசிலும் வாங்கி தாங்க....
வேணாம் நீ எல்லாரையும் தொந்திரவு பண்ணுவே..
இல்லப்பா...நான் எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறமா ஊதுறேன்..))))
அப்பா...எனக்கு பீப்பியும்..விசிலும் வாங்கி தாங்க....
வேணாம் நீ எல்லாரையும் தொந்திரவு பண்ணுவே..
இல்லப்பா...நான் எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறமா ஊதுறேன்..))))
Monday, 10 April 2017
அந்த வயதான முதியவள் அவளுடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,"எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றாள்.
உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவளிடம்,"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள்.
உடனே அந்த முதியவள்,"ஏன்?" என்று கேட்டாள். உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,"இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்று கூறினாள் சற்றே கடுமையுடன்.
அந்த முதியவள் இப்பொழுது அமைதியாக நின்றாள். அவள் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,"தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்" என்றாள்.
அந்த கேஷியர் பெண் அந்த முதியவள் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள். அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்.
உடனே அந்த முதியவள்,"இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?" என்று கேட்டாள்.
உடனே அந்த பெண்,"மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்.
உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினாள். அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னாள். அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்.
இந்த கதையின் நீதி என்னவென்றால் சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போட கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.
உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவளிடம்,"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள்.
உடனே அந்த முதியவள்,"ஏன்?" என்று கேட்டாள். உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,"இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்று கூறினாள் சற்றே கடுமையுடன்.
அந்த முதியவள் இப்பொழுது அமைதியாக நின்றாள். அவள் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,"தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்" என்றாள்.
அந்த கேஷியர் பெண் அந்த முதியவள் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள். அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்.
உடனே அந்த முதியவள்,"இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?" என்று கேட்டாள்.
உடனே அந்த பெண்,"மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்.
உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினாள். அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னாள். அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்.
இந்த கதையின் நீதி என்னவென்றால் சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போட கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.
Thursday, 6 April 2017
பால்
கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝😄
எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝😄
இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐
சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🌷
அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷
பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐
பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷
பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.
என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.
அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.
எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.
பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰
என்று என்னை நானே நொந்து கொண்டேன்.
பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐
நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐
இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰
அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.
திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍
எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,
மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰
நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.
என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰
அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.
‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🤔🌷
அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?
அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.
எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.
உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,
அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.
பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐
ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐
ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷
அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷
உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐
அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝
ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.
பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐
ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🌷
இதை நினைக்கிறபோது,
நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏😄👍🙏
இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌👍நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🌷
உயர்த்துகிற அம்சங்கள்
💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹
எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝😄
இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐
சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🌷
அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷
பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐
பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷
பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.
என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.
அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.
எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.
பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰
என்று என்னை நானே நொந்து கொண்டேன்.
பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐
நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐
இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰
அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.
திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍
எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,
மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰
நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.
என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰
அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.
‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🤔🌷
அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?
அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.
எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.
உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,
அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.
பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐
ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐
ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷
அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷
உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐
அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝
ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.
பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐
ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🌷
இதை நினைக்கிறபோது,
நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏😄👍🙏
இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌👍நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🌷
உயர்த்துகிற அம்சங்கள்
💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹
Wednesday, 22 March 2017
பாசம்..
*அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது*
வசதியாகத்தான்
இருக்கிறது மகனே…
நீ
கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்.
பொறுப்பாய்
என்னை
ஒப்படைத்து விட்டு
வெளியேறிய
போது,
முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில்
விட்டு விட்டு
என் முதுகுக்குப்
பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில்
எழுகிறது!
முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில்,
அன்று உனக்காக
நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல்
போனாலும்,
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்கு
மனம்
மகிழ்ச்சியடைகிறது.
நீ விடுதியில்
தங்கிப் படித்த
காலத்தில்
உன்னைப் பார்க்க
வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்,
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க
மறுத்ததன்
எதிர்வினையே இது
இப்போது அறிகிறேன்.
இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக
சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப்
பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்.
ஆயினும்
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு;
நான்
கற்றுக்கொடுத்தேன்
உனக்கு;
வாழ்க்கை இதுதான் என.
நீ கற்றுக்
கொடுக்கிறாய்
எனக்கு,
உறவுகள்
இதுதானென்று!
இந்தக் கவிதையைப்
படித்ததும் கண்கள்
குளமாகின்றது.
தாய் தந்தை மீது பாசம்
உள்ள
ஒவ்வொருவரும்
உணறவேண்டிய விஷயம் இது.
Monday, 20 March 2017
ராம நாம மகிமை..
வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்
என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,
மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு
33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32
எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு
ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி
ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.
அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.
என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,
மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு
33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32
எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு
ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி
ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.
அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.
Sunday, 19 March 2017
முட்டாள்
காவலர்:
யோவ் உன் பேர் என்னயா?
குடிமகன்:
என் பேரு 'ராஜேஷ்'ங்க.
ஆதார் அட்டைல 'ருஜேஷ்'ங்க.
ரேசன் கார்டுல 'ரஜேஷ்'
ஸ்கூல் டீசியில 'இராஜேஷ்'
டிரைவிங் லைசென்ஸ்ல 'ரிஜேஷ்'ங்க.
காவலர்:
யோவ், என்னயா பேர கேட்டா,
ஒலரிகிட்டு இருக்கே.
குடிமகன்:
நான் ஒலரலைங்க சார்!
நம்ம நாட்ல அரசு ஆவணங்களில்
நம்ம பெயரை இப்படித்தான் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு
எழுதி வைக்கிறாங்க.
காவலர்:
என்னயா இது?
ஆதார் அட்டைல
உன் போட்டோவே இல்ல.
குடிமகன்:
நல்லா உத்துப் பாருங்க சார்,
அதுல என் கண்ணு மட்டும் தெரியும்.
நம்ம டெக்னாலஜி அப்டி.
காவலர்:
உன் லைசென்ஸ்ல
கையெழுத்த காணோம்?
குடிமகன்:
நல்லா பாருங்க சார்,
கை ரேகை மாதிரி
ரெண்டு மூனு கோடு போகும்.
காவலர்:
ஆமா நீ எதுக்கு ஓவர் ஸ்பீடுல வந்தே?
குடிமகன்:
சார், நான் வச்சிருக்கிறது TVS -50.
இது 40 க்கு மேல போகாதுங்க.
காவலர்:
ரேஸன் கார்டுல உனக்கு வயசு
12 னு போட்டிருக்கு?
எப்டி நீ வண்டி ஓட்டலாம்?
குடிமகன்:
அய்யோ ஆபிசர்,
இது 10 வருஷத்துக்கு முன்னாடி
தமிழக அரசு கொடுத்த ரேசன் கார்டு.
இப்ப வரைக்கும் புது ரேசன் கார்டு தரவே இல்ல.
இப்ப எனக்கு 22 வயசு சார்.
காவலர்:
ரோடு டேக்ஸ்லாம்
ஒழுங்கா கட்டிருக்கியா?
குடிமகன்:
நம்ம ஊர்ல எங்க சார் இருக்கு ரோடு?
நீங்க ரோட காட்டுங்க
நாங்க டேக்ஸ கட்டுறோம்.
காவலர்:
இது சரிவராது.
நீ கோர்ட்ல வந்து பேசிக்கோ.
குடிமகன்:
ஐயோ வேணாம் சார்.
வாய்தா வாய்தானு
நாலு வருஷத்துக்கு இழுத்தடிச்சு அப்புறம் கேஸயே
தள்ளுபடி பண்ணிருவாங்க.
நீதி மன்றத்துல எப்ப சார்
எங்கள மாதிரி ஆளுங்களுக்கு
நீதி கிடச்சிருக்கு?
காவலர்:
இவ்ளோ வெவரமா பேசுறியே,
நீ என்ன படிச்சிருக்க?
குடிமகன்:
பாத்தீங்களா சார்,
நான் படிச்சவன்கிறதாலதான்
தெளிவா கேக்குறேன்னு
நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க.
படிச்சா வெவரம் வந்திரும்னு தெரிஞ்சுதான் அரசு
சில அரசு பள்ளிகளை மூடிட்டு,
மீதி இருக்கிற பள்ளிகளைக்
கவனிக்காம வச்சிருக்காங்க.
நாம முட்டாளா
இருக்குற வரைக்கும்தான்
அவங்களால
ஆட்சி செய்யமுடியும்.
காவலர்:
சரியா சொன்னே தம்பி.
உன்ன மாதிரியே எல்லாரும்
தெளிவா இருந்தா
நாங்க ஏன் உங்கள
தொல்ல பண்ண போறோம்.
சரி தம்பி நீ கெளம்பு.
பாத்துப் போப்பா.
யோவ் உன் பேர் என்னயா?
குடிமகன்:
என் பேரு 'ராஜேஷ்'ங்க.
ஆதார் அட்டைல 'ருஜேஷ்'ங்க.
ரேசன் கார்டுல 'ரஜேஷ்'
ஸ்கூல் டீசியில 'இராஜேஷ்'
டிரைவிங் லைசென்ஸ்ல 'ரிஜேஷ்'ங்க.
காவலர்:
யோவ், என்னயா பேர கேட்டா,
ஒலரிகிட்டு இருக்கே.
குடிமகன்:
நான் ஒலரலைங்க சார்!
நம்ம நாட்ல அரசு ஆவணங்களில்
நம்ம பெயரை இப்படித்தான் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு
எழுதி வைக்கிறாங்க.
காவலர்:
என்னயா இது?
ஆதார் அட்டைல
உன் போட்டோவே இல்ல.
குடிமகன்:
நல்லா உத்துப் பாருங்க சார்,
அதுல என் கண்ணு மட்டும் தெரியும்.
நம்ம டெக்னாலஜி அப்டி.
காவலர்:
உன் லைசென்ஸ்ல
கையெழுத்த காணோம்?
குடிமகன்:
நல்லா பாருங்க சார்,
கை ரேகை மாதிரி
ரெண்டு மூனு கோடு போகும்.
காவலர்:
ஆமா நீ எதுக்கு ஓவர் ஸ்பீடுல வந்தே?
குடிமகன்:
சார், நான் வச்சிருக்கிறது TVS -50.
இது 40 க்கு மேல போகாதுங்க.
காவலர்:
ரேஸன் கார்டுல உனக்கு வயசு
12 னு போட்டிருக்கு?
எப்டி நீ வண்டி ஓட்டலாம்?
குடிமகன்:
அய்யோ ஆபிசர்,
இது 10 வருஷத்துக்கு முன்னாடி
தமிழக அரசு கொடுத்த ரேசன் கார்டு.
இப்ப வரைக்கும் புது ரேசன் கார்டு தரவே இல்ல.
இப்ப எனக்கு 22 வயசு சார்.
காவலர்:
ரோடு டேக்ஸ்லாம்
ஒழுங்கா கட்டிருக்கியா?
குடிமகன்:
நம்ம ஊர்ல எங்க சார் இருக்கு ரோடு?
நீங்க ரோட காட்டுங்க
நாங்க டேக்ஸ கட்டுறோம்.
காவலர்:
இது சரிவராது.
நீ கோர்ட்ல வந்து பேசிக்கோ.
குடிமகன்:
ஐயோ வேணாம் சார்.
வாய்தா வாய்தானு
நாலு வருஷத்துக்கு இழுத்தடிச்சு அப்புறம் கேஸயே
தள்ளுபடி பண்ணிருவாங்க.
நீதி மன்றத்துல எப்ப சார்
எங்கள மாதிரி ஆளுங்களுக்கு
நீதி கிடச்சிருக்கு?
காவலர்:
இவ்ளோ வெவரமா பேசுறியே,
நீ என்ன படிச்சிருக்க?
குடிமகன்:
பாத்தீங்களா சார்,
நான் படிச்சவன்கிறதாலதான்
தெளிவா கேக்குறேன்னு
நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க.
படிச்சா வெவரம் வந்திரும்னு தெரிஞ்சுதான் அரசு
சில அரசு பள்ளிகளை மூடிட்டு,
மீதி இருக்கிற பள்ளிகளைக்
கவனிக்காம வச்சிருக்காங்க.
நாம முட்டாளா
இருக்குற வரைக்கும்தான்
அவங்களால
ஆட்சி செய்யமுடியும்.
காவலர்:
சரியா சொன்னே தம்பி.
உன்ன மாதிரியே எல்லாரும்
தெளிவா இருந்தா
நாங்க ஏன் உங்கள
தொல்ல பண்ண போறோம்.
சரி தம்பி நீ கெளம்பு.
பாத்துப் போப்பா.
Thursday, 16 March 2017
லீவு நல்லது
#லீவு_நல்லது
"ஒரு குழந்தை டெய்லி School க்கு போயி 100% Attendance வாங்கி, வருச கடைசியில ஒரு கோப்பை வாங்குறது பெருமையில்லை!!!
கல்யாணம், காதுகுத்து, இழவு, திருவிழா ன்னு எல்லா இடத்துலேயும் கூட்டிட்டு போங்க!!
அப்ப தான் நாகரிகம், பண்பாடு தெரியும்!!
உறவுகளின் வலிமை, ஒற்றுமை, விட்டுக்குடுத்தல், அழுகை, சிரிப்பு ன்னு நிறைய தெரிய வரும்!!!
இந்த சமூகம் ஒரு நாளில் கற்றுக் கொடுப்பதை, அந்த விடுமுறை எடுக்காத நாளில் அந்த வகுப்பறை கற்றுக் கொடுத்து விடாது!!!"
"ஒரு குழந்தை டெய்லி School க்கு போயி 100% Attendance வாங்கி, வருச கடைசியில ஒரு கோப்பை வாங்குறது பெருமையில்லை!!!
கல்யாணம், காதுகுத்து, இழவு, திருவிழா ன்னு எல்லா இடத்துலேயும் கூட்டிட்டு போங்க!!
அப்ப தான் நாகரிகம், பண்பாடு தெரியும்!!
உறவுகளின் வலிமை, ஒற்றுமை, விட்டுக்குடுத்தல், அழுகை, சிரிப்பு ன்னு நிறைய தெரிய வரும்!!!
இந்த சமூகம் ஒரு நாளில் கற்றுக் கொடுப்பதை, அந்த விடுமுறை எடுக்காத நாளில் அந்த வகுப்பறை கற்றுக் கொடுத்து விடாது!!!"
Subscribe to:
Posts (Atom)