Followers

Followers

Monday, 2 January 2017

நாகரீக கோமாளி..



நாகரீக கோமாளிகள் :
--------------- --------------
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.
காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.
அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?
பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.
முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..
நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.
பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..
நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்
அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.
அரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.
பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.


Sunday, 1 January 2017

சிரிங்க பாஸ்...


கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''

டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''

2. "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
"அது.... குருவி!"

3.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.

4.பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா:  பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."

5(கல்யாண மண்டபம்)
"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"

6.ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.


7. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!

8 . ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம் , அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MY CROW SOFT

9 . ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.

10 . ford ன்னா என்ன?
வண்டி
oxford ன்னா?
காளைமாட்டு வண்டி.
😀😀😀😀😀



புத்தி வந்ததா....

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?

    -

 ☺😊😀😂😃😄😅😆

Wednesday, 14 December 2016

ஹா.......ஹா.....

பிள்ளையாரு ஸாமிக்கு கல்யாணத்துக்கு ஏன் பொண்ணுகெடைக்கு...மாட்டேங்குதுன்னு கொஞ்சம்  மாத்தி யோசிச்சு போட்டோம்ல...
அது வேற ஒன்னுமில்ல.... அவரால் எந்த பொண்ணுக்குமே   "உம்மா".....கொடுக்க முடியாதுல்ல.....))))))



 ஒரு படிக்காத மேதை தன் மகனாவது நல்லா படிச்சு முன்னுக்கு வரணுமினு கான்வெண்டுல சேர்த்தாங்க...
ஒருநாள்   ஹோம் ஒர்க்ல.. நீர்யானைக்கு இங்கிலீஷுல என்னா சொல்லணுமனு மகன் கேட்டிருக்கான்... இவுகதான் படிக்காத மேதாவி ஆச்சே ரொம்பவே யோசிச்சு போட்டு   நீர் னா  வாட்டர்...யானைன்னா எலிஃபெண்டு  ஸோ.... வாட்டர் எலிஃபெண்டுனு சொல்லி போட்டாருல்லா....)))))

Tuesday, 13 December 2016

வங் "கி"" அவள்...



😃😜பேங்க் வாசலில் ஒரு வாரம் காத்துக் கிடந்த வாலிபனுக்கு சிந்தனையில் உதித்த கவிதை👨‍❤️‍👨
💐அவள் கன்னம் கனரா வங்கி..
👁👁கண்களோ கரூர் வைஸ்யா..
👄பற்களில் அவள் பஞ்சாப் நேஷனல்...
😃இடுப்போ இந்தியன் ஓவர்சீஸ்..
🌹நகங்கள் நபார்டு வங்கி..
💋இதழ்கள் இந்தியன் வங்கி..
💃மெல்லிடையோ மெர்க்கன்டைல்
😁அவள் முத்து சிரிப்போ முத்ரா வங்கி..
👁பார்வையிலவள் பாரத வங்கி😳
👰தேகமோ தேனா வங்கி..
😡மொத்தத்தில் சில்லறைக்காக என்னை வரிசையில் நிற்க வைத்த ரிசர்வ் வங்கி அவள்..😬😭


Wednesday, 7 December 2016

அழைப்பு...

நம் அனைத்து வலைப்பதிவர்களின்  அன்புக்கும்  பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு வை. கோபாலகிருஷ்ணன் ஸாரின் பிறந்த தினம்...8---12-  2016..
 நாம் அனைத்து வலைப்பதிவர்களும் அவர்களை வாழ்த்தி வணங்கி ஆசி பெற இங்கே வருக  வருக என்று அன்புடன் அழைக்கிறேன்

 இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்  கோபால் ஸார்


Tuesday, 6 December 2016

அஞ்சலி

ஆயிரம் பேர் இருந்தும்
ஆயிரம் கோடி பணமிருந்தும் அத்தனை அதிகாரங்களும் விரல் நுனியில் இருந்தும்!

ஒரு கையளவு காற்றுக்காக
அந்த இதயமும் நுரையிரலும் எத்தனை எத்தனை ஏக்கங்களோடு
தவித்துக்கொண்டிருக்கும்!!

நினைச்சுப்பார்த்தால்
இந்த வாழ்க்கையில்
எதுவுமே பெரிசில்லை

கிடைத்த வாழ்க்கையை நிம்மதியாக, சந்தோஷமாக வாழுங்கள் - வாழ விடுங்கள்!!!

ஆழ்ந்த இரங்கல்கள்