Followers

Followers

Monday 29 August 2016

காசி


காசியில்...
கருடன் பறக்காது.
பல்லி கத்தாது.
மாடு முட்டாது.
பூக்கள் மணக்காது.
பிணம் எரியும் போது நாறாது...

முதலில் கேள்விப்பட்ட போது, வழக்கம் போல இதுவும் இந்து மத அதீத நம்பிக்கை தான் போல என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால், கருடன் எங்கேயும் பறக்கவே இல்லை. (அத்தனை பிணங்கள் எரியும் இடத்தில் Sky Scavenger கருடன் இல்லை என்பதே பேராச்சர்யம்).

நடக்கும் போது நாலடிக்கொரு இடத்தில் மாட்டுச் சாணம் கிடக்கும் அளவுக்கு மாடுகள் நிறைந்த தெருக்களில் ஒரு மாடு கூட முட்ட எத்தனிக்கவில்லை.

பல்லி கத்துகிறதா என்று ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு நேரமில்லை. அவசியமுமில்லை.
பூக்கள் மணக்கவில்லை ( மதுரை மல்லிகையை அங்கே எடுத்துச் சென்று ஒரு முறை சோதித்துப் பார்க்கலாம்)

பிணம் எரியும் போது நாறவில்லை. (கிட்டத்தட்ட 4 மணி நேரம் சடலங்கள் வருவதையும், அதன் சடங்குகள், விறகு கொண்டு வருபவர்கள், விறகு உடைப்பவர்கள், எரிப்பவர்கள், எரித்த சாம்பலை அகற்றுபர்களை அருகிலிருந்து கூர்ந்து கவனித்தோம்.)

பக்தியைக் கடந்து புவியியல், மண்ணியல் படி பார்த்தால், அந்த நிலம் ஏதோ ஒரு தனித்துவமாகத் தான் இருக்கக் கூடும். இல்லாவிட்டால், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இறங்கி கிழக்கில் பாயும் கங்கை, காசியில் மட்டும் வடக்கு நோக்கி பாயும் சிறப்பு எப்படி அமையும்?
🖥
இறைவன் இருப்பதால் அதை புனிதத்தலம் என்று நாம் நினைக்கிறோம். நம் முன்னோர்கள் அது புனிதத்தலமாக இருப்பதால் அதை இறைவன் இருக்கும் இடமாக நிர்மாணித்திருக்கிறார்கள்.
🖥
ஒவ்வொரு மனிதரும் காசியில் பாயும் கங்கையில் நீராட வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருப்பவர்களுக்கு எளிமையாகக் கிடைக்கும் அற்புதம்.

வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு ஒரு முறையேணும் சென்று வாருங்கள்.

இந்து மதம் என்பது அதீத நம்பிக்கை மட்டுமல்ல.
வாழ்வியல் முறை.



Sunday 21 August 2016

ஆ ஆ ஆ ஆ

இனிய காலை வணக்கத்துடன்..

AMERICA;- முதன் முதலில்..
நாங்க தான்.."MOON"ல.. கால்
வச்சோம்..!!
GERMAN;- நாங்க தான்..
"VENUS"ல.. கால் வச்சோம்..!!
JAPAN;- நாங்க தான்..
"MARSH"ல.. கால் வச்சது..!!
AMERICA;- ஹேய் இந்தியா..
நீங்க எதுல கால் வச்சீங்க..?
INDIA;- நாங்க தான்டா
"SUN"ல.. கால் வச்சது..!!
AMERICA;- டேய் பொய்
சொல்லாதிங்கடா SUN
க்கு.. பக்கத்துல
போனாலே.. நீங்க
செத்துருவீங்கடா..!!
INDIA;- அடிங்ங்ங்..
கொய்ய்ய்யால.. நாங்க
போனது நைட்ல டா..!!
AMERICA;- ஆஆஆஆஆஆ

Tuesday 16 August 2016

ஹா ஹா


joke of d day....................................

Teacher - Can you please tell the name of 2 great Kings who have brought happiness & peace into people's lives ?”

Student :

“Smo-king & Drin-king ” !!!

Teacher Resigned !😂😂😇😇


Teacher: Who was Akbar ?
Boy: Akbar was Gay.

Teacher:- What, Are you mad ? Why did you say that?

Boy:- We have heard Laila - Majnu, Romeo-Juliet
But Only
Akbar - Birbal !
Teacher died😂😂😂

‎Girl friend: Nuvvu monthly enni sarlu shave chestav
Boy friend: Monthly kaadu rojuku 30 nundi 40 sarlu
chesta
Girl: Mentalodiva
Boy: Kaadu mangalodini.........🙉💇

This 1 is a killer 1 .....

Teacher : students.. On britannia tiger biscuit cover,there is a green dot. Wat does that mean?

Student : tiger is online.. .😂😂





Wednesday 10 August 2016

காத்திரு


காத்திருக்க பழகு !
----------------------------
பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேறும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

விதை மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய்யை பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

"இது உன்னுடயை வாழ்க்கை

ஒட்டப்பந்தயம் அல்ல".

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததினாலேயே,

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது

அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.

"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்

உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்"

காத்திருக்க பழகு

வாழப்பழகுவாய். 

Sunday 7 August 2016

சிரிங்க..சிரிங்க..சிரிச்சிகிட்டே இருங்க...!!!

தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர்.
அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது.
அவரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது.
மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப்போய் விட்டது.
இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது?
எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்துஅலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.
மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.
மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது. மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.
இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்படி என்ன தான் எழுதியிருந்தது?
" அன்பு மிக்கவருக்கு
வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி.
இப்படிக்கு
...................
பி.கு.
ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.

Thursday 4 August 2016

என்னம்மா இப்பூடி பண்றிங்களேம்மா


ஒரு பொண்ணு டெய்லி காலெஜுலெர்ந்து வரும்போது ஒருத்தன்
பின்னாடியே வரதக் கவனிச்சுச்சு ...
வீட்டுக்குள்ள போயி மூஞ்சி கழுவி ட்ரஸ்
மாத்திக்கிட்டு வந்து பாத்தா அவன்
அங்கேயே நின்னுக்கிட்டு செல்போன
நோண்டிக்கிட்டு இருக்கான்....
ஒருவாரம் ஆயிருச்சு.... தினமும்
அதே கதை தான்.

பொண்ணு யோசிச்சது " அம்மாப்பாட்டச்
சொல்லிறலாமா?"
"இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப்
பாப்போம்..."
ஒரு மாசம் தாண்டிருச்சு... கதை ரிப்பீட்டு...
ஒரு நண்பியக் கூட்டிக்கிட்டு வந்து அவனக்
காமிச்சுக் கதை சொல்லிச்சு அந்தப் பெண்...
பிரெண்டு " மூணு மாசம் வரைக்கும் பாரு...
பையன் நல்லா இருக்கான்.... வீட்டுல சொல்லிக்
கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம்"
ன்னு சொல்லிச்சு...

பெண்ணு மனசுக்குள்ள
ஒரு கிளுகிளுப்பு ஓட ஆரம்பிச்சிருச்சு....
நண்பியோடு கூடச் சேர்ந்து அவன் வேலை,
குடும்ப விபரம் எல்லாம்
கண்டு பிடிச்சு முடிச்ச போது ஒரு வருஷம்
தாண்டிருச்சு....
அப்பாம்மாட்டச் சொல்லிருச்சு.... அவங்களும்
கலியாணம் பேசி முடிச்சிரலான்னு
சொல்லி ஊர்லேர்ந்து பெரியவங்களக்
கூட்டிட்டு வந்து மொறைப் படி வரன் கேக்கப்
போக ரெடியானாங்க....

சந்தோசம் தாங்காமப் பொண்ணு அன்னைக்குச்
காலைல கோயில் போயிட்டு வரும்போது
அவன் கிட்டப் போயி
"ஒரு வருஷத்துக்கு மேலா என்ன
பாலோ பண்ணுறீங்க...
சின்சியரா வீட்டு முன்னாடி நின்னு பாக்குறீங்க....
ஆனாலும் ஒரு தப்புத் தண்டாவான
விஷயமெல்லாம் பண்ணலை.... அதுனால நான்
வீட்டுல சொல்லி, உங்க வீட்டுல சம்பந்த பேச
நாளைக்கு என்னோட அப்பாம்மா வராங்க... உங்க
வீட்டுல எந்தத் தடையும் சொல்ல
மாட்டாங்கன்னும் கண்டு பிடிச்சிட்டேன்.... ஐ
லவ் யூ டா கண்ணா" ன்னுச்சு...

அவன் அதுக்கு
"அடாடா... நான் உங்க
வீட்டுவாசல்ல உங்களுக்காகக்
காத்து நிக்கலை...உங்க வீட்டு WI-FI ல நீங்க
பாஸ் வேர்டு போடலை... அதுனால
ப்ரீயா டவுன்லோடு பண்ணத்தான் வரேன்..."
ன்னு சொல்லிட்டு எடுத்தான் பாருங்க ஓட்டம்...

என்னம்மா...... இப்படி பண்றீங்களேமா....🏃🏃🏃🏃🏃