Followers

Followers

Thursday 22 June 2017

பெண்.....

புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.!இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர். அன்றே கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை…!

ஆனால் அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது. அதனால் கதவை திறக்க வில்லை அவன். அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய் விட்டனர்.

கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா, அப்பா வந்தனர் கதவை தட்டினார்கள். இருவரும்ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது என்று சொல்லி கதவை திறந்தாள். ஆனால் கணவன் ஒன்றும் சொல்ல வில்லை. வருடங்கள் உருண்டோடின….!

இரண்டு ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான். அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஏன் பெண் குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள் … ?

அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவை திறக்க ஒரு பெண் பிறந்துவிட்டாள் என்றான் கர்வத்துடன்….!!!


👉.

Wednesday 21 June 2017

கவலை

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
 வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
 மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

 கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

Tuesday 20 June 2017

மனிதம்

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...

#இன்றையசூழ்நிலையில்............

மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;
 . . (படித்ததில் பிடித்தது)

Friday 16 June 2017

பாஸிடிவ் திங்கிங்

Think positive
Be happy,,,,🤷‍♂🤷‍♂🤷‍♂

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:🤕🤕

சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை.
நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது.😚

அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement.😩😩😩

அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்.😭😭😭

அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.🤒🤒😷🤕

என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.🤧🤧

அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார்.✍

பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.✍✍✍

சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன்.🙌

60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுவேன்.👍👍

என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் தஞ்சம் புகுந்தார்.👍👍

அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும் புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்🤷‍♂🤷‍♂

இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்.கடவுள் என் மீது தன் கருணையை பொழிந்தார்.☺☺

படித்த கணவர் நன்றி பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.☺

என்ன அற்புதமான மனதிற்கு வவிவூட்டும் வாக்கியங்கள்.☺☺☺☺

ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.☺☺




Wednesday 7 June 2017

முக்கியம்

வேலைக்கு போய் திரும்பி வந்த  தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..  நம்ம வீட்டு  பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?  அதைப் போய்  ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?  நம்ம வீட்டு  பீரோல இருக்குற நகை,  பணம் எல்லாம்  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?  ஷ்ஷு....  அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...  உங்க ATM கார்டை  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?  என்ன கேள்வி இது..?  நீ சொல்றதெல்லாம்  ரொம்ப முக்கியமான பொருள்.  அதையெல்லாம்  ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...  " அப்போ ஏம்மா  என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? "  இம்முறை  அம்மாவிடமிருந்து பதில் இல்லை.  கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!

படித்ததில் பிடித்தது

Wednesday 24 May 2017

சில. வேண்டும்கள்

இன்றைய தேடல்

உள்ளம் கணக்கும் போது உறுதுணையாக உள்ளம் வேண்டும்.....

அழுது புலம்பும் போது ஆறுதல் கூறும் அன்பு வேண்டும்....

உயர பறக்கும் போது நூலின் நன்றி மறவாது இருக்க வேண்டும்.....

உதவி எண்ணும் போது அன்புடையேர் கண்ணேல்லம் காண வேண்டும்.....

கொடுப்பவர் பணம் காண மனம் காணும் உள்ளம்  வேண்டும்.....

இல்லாமை அழிந்திட வேண்டும்.....

வறுமை ஒழிந்திட வேண்டும்.....


Tuesday 23 May 2017

மெடிகல் லீவு.....

வாசுதேவன்-தேவகி இவர்களின் 8வது குழந்தையால் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்த கம்சன் அவர்களை சிறையிலடைத்து ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், அதனை தன் கையாலேயே கொன்று பழி தீர்த்துகொண்டானாம். என்று ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போ லாஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்திருந்த நம்ம மாணிக்கம்  எந்திருச்சு,
"டீச்சர்....கம்சனுக்குதான் அந்த 8வது குழந்தையால் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு போச்சே, அப்புறம் ஏன் வாசுதேவன்-தேவகி ரெண்டு பேரையும் ஒரே சிறையில அடைச்சி வச்சான் ....?" அப்படின்னு கேட்டுச்சு...

*அன்னைக்கி மெடிக்கல் லீவ்ல போனவங்க தான் அந்த டீச்சர் இன்னும் வரல*

Monday 22 May 2017

அப்பா....

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. ”வேலை கிடைத்ததும் எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான். “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமான பதில் சொல்” என்று வழியனுப்பி வைத்தான் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.

கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

 நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது. குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக
மாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் ஒளிந்து கொண்டிருந்தது. “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. “நமக்கு வேலை
கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். வருத்தத்துடனேயே அதை காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை. கலக்கத்துடனே
நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்களை வாங்கிப் பார்த்த அதிகாரி,
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்துவிட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன். ”என்ன  யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா
மூலம் கண்காணித்தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்பாவின் மீதுள்ள எரிச்சல் தணிந்தது. வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
மகன்.

அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் !!!😁😁

Sunday 21 May 2017

சாதனையாளன்

முதல் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அதிர்ஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ அனுபவசாலி
நான்காம் முயற்சியில் வெற்றி பெற்றால்
நீ தைரியசாலி
அதற்கு மேலும் வெற்றி பெற்றால்
நீ தான் சாதனையாளன்....

டி.வி....மொபைல்...

Wife - Tv மாதிரி
Girl frd - mobile மாதிரி
வீட்டுல இருக்கும் போது TV use பண்ணுங்க,
வெளியே போகும்போது mobile use பண்ணுங்க,

Tv உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா mobile எப்பவுமே புடிக்கும்,

TV free யா use பண்ணிக்கலாம், ஆனா mobile charger போடலைன்னா,,,
top up
பண்ணலைன்னா,,,
அவ்வளவுதான் ,

TV பெரிசா , பல்லக்காட்டும். பழச இருக்கும் ,,,ஆனா mobile அழகா slim மா இருக்கும் ,

TV க்கு பராமரிப்பு செலவு கம்மியா இருக்கும் , ஆனா mobile க்கு அப்படி கிடையாது ,உங்க பர்ஸூக்கு சாவுமணி அடிக்காம விடாது ,

TV க்கு remote இருக்கும் ,
ஆனா mobile க்கு கிடையாது ,,,,

முக்கியமா mobile க்கு 2 வகையான uses இருக்கும் , ஒன்னு நீங்க பேசலாம் ,,,,மற்றொன்று கேட்கலாம் !

ஆனா TV யில் நீங்க பேச முடியாது அது சொல்றததான் கேட்கோனும்,,,!

கடைசியா ஒன்னே ஒன்று ,,,,

TV யில virus கிடையாது ,,,,
ஆனா mobile யில virus உண்டு,,,,

so be careful😜

Friday 19 May 2017

தவறே இல்லை.

சரி என்று வரும் வரை
தப்புகள் தவறே இல்லை

தெளிவு வரும் வரை
குழப்பங்கள் தவறே இல்லை

அழகு வரும் வரை
பருக்கள் தவறே இல்லை

உறவு வரும் வரை
தனிமைகள் தவறே இல்லை

சேர்க்கை வரும வரை
பிரிவுகள் தவறே இல்லை

பொறுப்பு வரும் வரை
குறும்புகள் தவறே இல்லை

காதல் வரும் வரை
ஏமாற்றம் தவறே இல்லை

குடும்பம் வரும் வரை
சுதந்திரம் தவறே இல்லை

வாய்ப்புகள் வரும் வரை
காத்திருப்பு தவறே இல்லை

வெற்றி வரும் வரை
தோல்விகள் தவறே இல்லை

Thursday 18 May 2017

நீ. நீயாகவே. இரு..

*நீ . . .நீயாக இரு !*

தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீயாகவே இரு !*

Friday 14 April 2017

பீப்பீ.......

ஒரு  பேரூந்து நிலையத்தில் ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் பேசியதைக்  கேட்டவுடன் ஒரே சிரிப்பு..

அப்பா...எனக்கு  பீப்பியும்..விசிலும்  வாங்கி தாங்க....

வேணாம்  நீ  எல்லாரையும் தொந்திரவு  பண்ணுவே..

இல்லப்பா...நான்  எல்லாரும்  தூங்கினதுக்கு அப்புறமா  ஊதுறேன்..))))

Monday 10 April 2017

அந்த வயதான முதியவள் அவளுடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,"எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றாள்.

உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவளிடம்,"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்"  என்றாள்.

உடனே அந்த முதியவள்,"ஏன்?" என்று கேட்டாள். உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,"இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்று கூறினாள் சற்றே கடுமையுடன்.

அந்த முதியவள் இப்பொழுது அமைதியாக நின்றாள். அவள் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,"தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்" என்றாள்.

அந்த கேஷியர் பெண் அந்த முதியவள் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள். அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்.

உடனே அந்த முதியவள்,"இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?" என்று கேட்டாள்.

உடனே அந்த பெண்,"மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்.

உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினாள். அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னாள். அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்.

இந்த கதையின் நீதி என்னவென்றால்  சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போட கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

Thursday 6 April 2017

பால்

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🌷

 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🤔🌷

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🌷

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏😄👍🙏

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌👍நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🌷
உயர்த்துகிற அம்சங்கள்


💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹

Wednesday 22 March 2017

பாசம்..


*அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது*

வசதியாகத்தான்
இருக்கிறது மகனே…
நீ
கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்.
பொறுப்பாய்
என்னை
ஒப்படைத்து விட்டு
வெளியேறிய
போது,
முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில்
விட்டு விட்டு
என் முதுகுக்குப்
பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில்
எழுகிறது!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில்,
அன்று உனக்காக
நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல்
போனாலும்,
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்கு
மனம்
மகிழ்ச்சியடைகிறது.
நீ விடுதியில்
தங்கிப் படித்த
காலத்தில்
உன்னைப் பார்க்க
வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்,
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க
மறுத்ததன்
எதிர்வினையே இது
இப்போது அறிகிறேன்.

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக
சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப்
பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்.
ஆயினும்
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு;

நான்
கற்றுக்கொடுத்தேன்
உனக்கு;
வாழ்க்கை இதுதான் என.
நீ கற்றுக்
கொடுக்கிறாய்
எனக்கு,
உறவுகள்
இதுதானென்று!

இந்தக் கவிதையைப்
படித்ததும் கண்கள்
குளமாகின்றது.

தாய் தந்தை மீது பாசம்
உள்ள
ஒவ்வொருவரும்
உணறவேண்டிய விஷயம் இது.





Monday 20 March 2017

ராம நாம மகிமை..

வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.




அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.

Sunday 19 March 2017

முட்டாள்

காவலர்:
யோவ் உன் பேர் என்னயா?
குடிமகன்:
என் பேரு 'ராஜேஷ்'ங்க.
ஆதார் அட்டைல 'ருஜேஷ்'ங்க.
ரேசன் கார்டுல 'ரஜேஷ்'
ஸ்கூல் டீசியில 'இராஜேஷ்'
டிரைவிங் லைசென்ஸ்ல 'ரிஜேஷ்'ங்க.
காவலர்:
யோவ், என்னயா பேர கேட்டா,
ஒலரிகிட்டு இருக்கே.
குடிமகன்:
நான் ஒலரலைங்க சார்!
நம்ம நாட்ல அரசு ஆவணங்களில்
நம்ம பெயரை இப்படித்தான் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு
எழுதி வைக்கிறாங்க.
காவலர்:
என்னயா இது?
ஆதார் அட்டைல
உன் போட்டோவே இல்ல.
குடிமகன்:
நல்லா உத்துப் பாருங்க சார்,
அதுல என் கண்ணு மட்டும் தெரியும்.
நம்ம டெக்னாலஜி அப்டி.
காவலர்:
உன் லைசென்ஸ்ல
கையெழுத்த காணோம்?
குடிமகன்:
நல்லா பாருங்க சார்,
கை ரேகை மாதிரி
ரெண்டு மூனு கோடு போகும்.
காவலர்:
ஆமா நீ எதுக்கு ஓவர் ஸ்பீடுல வந்தே?
குடிமகன்:
சார், நான் வச்சிருக்கிறது TVS -50.
இது 40 க்கு மேல போகாதுங்க.
காவலர்:
ரேஸன் கார்டுல உனக்கு வயசு
12 னு போட்டிருக்கு?
எப்டி நீ வண்டி ஓட்டலாம்?
குடிமகன்:
அய்யோ ஆபிசர்,
இது 10 வருஷத்துக்கு முன்னாடி
தமிழக அரசு கொடுத்த ரேசன் கார்டு.
இப்ப வரைக்கும் புது ரேசன் கார்டு தரவே இல்ல.
இப்ப எனக்கு 22 வயசு சார்.
காவலர்:
ரோடு டேக்ஸ்லாம்
ஒழுங்கா கட்டிருக்கியா?
குடிமகன்:
நம்ம ஊர்ல எங்க சார் இருக்கு ரோடு?
நீங்க ரோட காட்டுங்க
நாங்க டேக்ஸ கட்டுறோம்.
காவலர்:
இது சரிவராது.
நீ கோர்ட்ல வந்து பேசிக்கோ.
குடிமகன்:
ஐயோ வேணாம் சார்.
வாய்தா வாய்தானு
நாலு வருஷத்துக்கு இழுத்தடிச்சு அப்புறம் கேஸயே
தள்ளுபடி பண்ணிருவாங்க.
நீதி மன்றத்துல எப்ப சார்
எங்கள மாதிரி ஆளுங்களுக்கு
நீதி கிடச்சிருக்கு?
காவலர்:
இவ்ளோ வெவரமா பேசுறியே,
நீ என்ன படிச்சிருக்க?
குடிமகன்:
பாத்தீங்களா சார்,
நான் படிச்சவன்கிறதாலதான்
தெளிவா கேக்குறேன்னு
நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க.
படிச்சா வெவரம் வந்திரும்னு தெரிஞ்சுதான் அரசு
சில அரசு பள்ளிகளை மூடிட்டு,
மீதி இருக்கிற பள்ளிகளைக்
கவனிக்காம வச்சிருக்காங்க.
நாம முட்டாளா
இருக்குற வரைக்கும்தான்
அவங்களால
ஆட்சி செய்யமுடியும்.
காவலர்:
சரியா சொன்னே தம்பி.
உன்ன மாதிரியே எல்லாரும்
தெளிவா இருந்தா
நாங்க ஏன் உங்கள
தொல்ல பண்ண போறோம்.
சரி தம்பி நீ கெளம்பு.
பாத்துப் போப்பா.

Thursday 16 March 2017

லீவு நல்லது

#லீவு_நல்லது

"ஒரு குழந்தை டெய்லி School க்கு போயி 100% Attendance வாங்கி, வருச கடைசியில ஒரு கோப்பை வாங்குறது பெருமையில்லை!!!

கல்யாணம், காதுகுத்து, இழவு, திருவிழா ன்னு எல்லா இடத்துலேயும் கூட்டிட்டு போங்க!!
அப்ப தான் நாகரிகம், பண்பாடு தெரியும்!!
உறவுகளின் வலிமை, ஒற்றுமை, விட்டுக்குடுத்தல், அழுகை, சிரிப்பு ன்னு நிறைய தெரிய வரும்!!!

இந்த சமூகம் ஒரு நாளில் கற்றுக் கொடுப்பதை, அந்த விடுமுறை எடுக்காத நாளில் அந்த வகுப்பறை கற்றுக் கொடுத்து விடாது!!!"

Wednesday 15 March 2017

துன்பம்

ஒரு குட்டிக்கதை

ஒரு கட்டுமான எஞ்சினியர் 13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…
.
ஒரு முக்கியமான வேலை…
.
கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..
.கொத்தனார் வேலை
மும்முரத்தில்,
சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…
.
போனை எடுக்கவில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே
பார்க்கவில்லை…
.
 இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில்
 இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…
.
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…
.
ஒரு பத்து ரூபாய்
 நோட்டை எடுத்து,
மேலே இருந்து,
கொத்தனார் அருகில் போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த கொத்தனார்,
அதை எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…
.
 ஆனால்சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்..
.
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…
.
 அதையும்
 எடுத்து சட்டைப் பையில் வைத்துக்
 கொண்டு…
கொத்தனார் மும்முரமாக
 இருந்தார்…
.
எஞ்சினியர்.. பொறுமை
இழந்து
ஒரு சின்ன கல்லை எடுத்து,
 கொத்தனார் மீது போட்டார்…
.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல
 வலியோடு, மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும்
அப்படித்தான்….

மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...

இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...

அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...

ஆனால் ஒரு
 துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.

      துன்பங்கள் வரும் நேரம்…
இறைவன்
 உன்னைத் தேடி அழைக்கும் நேரம்
 என்று பொருள்.


Tuesday 14 March 2017

இங்க்லீஷ் படும்பாடு...



``` Effect of Whatsapp on the English language

Peter & Laxmi  on Whatsapp :

Peter : Hi dear.

Laxmi : ✋

Peter : How are you .??

Laxmi : 😊👍

Peter : missing me..?

Laxmi : 😜😉

Peter : I'm not feeling well...

Laxmi : 😱

Peter : How was your day..???

Laxmi : 👌

Peter : are you busy.??

Laxmi : ✔

Peter : Why ?? What are you doing ??

Laxmi: 💄💅

Peter : is there anyone near you..??

Laxmi : ❌

Peter : why don't you reply in words? Why are you using smiley faces?

Laxmi :- 😥😡

Peter : I heard you failed in English ??

Laxmi:
Who telled you ? It is unpossible.. I went to saw the resalt yestathey...
I Passed away

Peter :
hmmm lets go back to smileys pls
😳😳😳

Laxmi:-
ok dear,
God blast you.
😂😝😂😆```


கம்ப்யூட்டர்எஞ்சினியர் படம் எடுத்தா.....

ஜிமெயில்     ஸன் ஆஃப்...ஈமெயில்

விண்டோஸ்  தாண்டி வருவாயா

ராம்  தேடிய  மதர்  போர்டு

7ஜி  பி   கூகுள்  காலனி

எனக்கு 20 எம்.பி,  உனக்கு  18எம்பி..

புரோக்ராம்ஸ்  ஆயிரம்..

ஒரு மவுஸின் கதை..

மானிட்டருக்குள்  மழை..

எல்லாம்  பிராசசர்  செயல்

நான்  கிராபிக்ஸ் டிஸைனர் அல்ல.

சி மனசுல  சி++


Monday 13 March 2017

க்யூட் ஸ்டோரி..



ஒரு *real & cute story* சொல்ரேன்😉😉😉

கடவுள் ஒருநாள்,
     
             ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை  opan பண்ணுனார்..

             அதற்க்கு "உலகம்" என்று தலைப்பிட்டார்.......

அதில் முதலில்,

                வானத்தையும், பூமியையும் add பண்ணுனார்,

அடுத்து, சூரியன், கடல், மழை, ஆறு,குளம்,மரங்கள், விலங்குகள்,

பறவைகள், ஊரும் பிராணிகள் என வரிசையாக add பண்ணி

மகிழ்ந்தார்...

இறுதியாக,

                மனிதனை add பண்ணுனார். மனிதனை add பண்ணிய

கடவுள், மிகவும் மனமகிழ்ந்து, " இனி இந்த group கு நான்

தேவை இல்லை, மனிதனே இந்த group ஐ நல்ல படியாக நடத்தி

செல்வான்" என்று எண்ணி, மனிதனை group admin ஆக்கி

விட்டு, அவர் left ஆகி சென்று விட்டார்.

                 கொஞ்ச நாட்க்கள் நன்றாக செயல் பட்ட மனிதன்,

காலப்போக்கில் தன் சுய நலத்திற்க்காகவும், சுய

இலாபத்திற்க்காகவும், மரங்கள், குளம், ஆறு போன்றவற்றை

remove பண்ணி விட்டு, அதற்க்கு பதிலாக, shoping mall,

apartment, factory's போன்றவற்றை add பண்ணினான்.

                 இதனால் கோபம் கொண்ட மழை, " என் நண்பர்கள்

இல்லாத இந்த group ல் நானும் இருக்க மாட்டேன் என்று,

கோபத்துடன் left ஆகி சென்றது... ஆனால் சூரியன் left ஆகாமல்,

group ல் இருந்த படியே, தன் கோபத்தை மனிதன் மீது காட்டிக்

கொண்டிருக்கிறது....😔😔😔😔


Sunday 12 March 2017

குழந்தை..

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.

"என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.
என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.
என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்...

"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.

தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.

உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை.

நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

*உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.
உலகம் உனக்கு சொர்க்கமாகும்*" என்றார் குரு.

படித்தேன்,ரசித்தேன் பகிர்ந்தேன் .......!!!

Saturday 11 March 2017

சிவன்... பார்வதி..

டீச்சர் கேட்டார்...
பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

குறும்புக்கார மாணவனின் பதில்....
சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு.
எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது
ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்
சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...

மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.

படித்ததில் ரசித்தது

சிவன்... பார்வதி..

டீச்சர் கேட்டார்...
பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

குறும்புக்கார மாணவனின் பதில்....
சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு.
எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது
ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்
சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...

மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.

படித்ததில் ரசித்தது

கணவன் மனைவி..

👩மனைவி : ஏங்க...! கிச்சன்ல
அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.

👱கணவன் : எங்க வச்சிருக்கு காணமே?

👩மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?

👱கணவன் : நல்லா தேடிட்டேன் பா.. கிடைக்கல.

👩மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....

உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....

நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் மேய்க்கிறீங்க... இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம்
வேற.!!

👱கணவன்: இல்ல... நெஜமாவே உப்பு டப்பாவே காணல டி...

👩மனைவி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...

👱கணவன் : ????g
😳🙄😰😰😢😥

_அனைத்து கணவர்களுக்கும் சமர்ப்பணம்....._

*இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.

Thursday 9 March 2017

வாழைப்பழம்....



*படிச்சிட்டு சிரிக்க கூடாது*
!!!!!!!!!!!!!!!!!!""!!!!""""""!!!!!!!!!!!!!!!!!!!!
ஒரு *Electricity Board Office,* வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்...

*EB ஆபிஸர்* :: வாழைபழம் என்னபா விலை..?

*வியாபாரி* :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்...?

*EB ஆபிஸர்* :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

*வியாபாரி* :: *இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்.*

*குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா.*

*தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.*

*நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்.....*

*EB ஆபிஸர்* :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்...??

*வியாபாரி* :: This is my tariff plan.
ஏன்டா கொய்யாலே....நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு.....வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க....கேட்ட tariffனு சொல்லூவீங்க...
Bloody rascals.....*

*Banana vendor rocked and*
*EB officer shocked.*


டேக் இட் ஈஸி...

உங்களுக்கு நல்லா English படிக்க தெரியுமா?
அப்டீனா ஒரு சின்ன test.
Nari oruri kori ranguri


மேலுள்ள நான்கு வார்த்தைகளில் ri என்பதை நீக்கிவிட்டு படிக்கவும்.

Sunday 5 March 2017

பக்தி

கம்ப்ளீட்.....ஃபினிஷ்ட்...

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்.,

ஆங்கிலத்தில் *"complete"* என்ற சொல்லுக்கும் *"finished"* என்ற சொல்லுக்கும் _உள்ள வித்தியாசம் என்ன?_ என்று கேட்டார்கள்.

கூட்டத்தினர் _இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை_ என்று கூறினார்கள்.

அப்போது *அறிஞர் அண்ணா* ...

"நீங்கள் ஒரு _சரியான பெண்ணை திருமணம் செய்தால்_, உங்கள் வாழ்கை *"Complete"*.

அதுவே "நீங்கள் ஒரு _தவறான பெண்ணை திருமணம் செய்தால்_, உங்கள் வாழ்கை *"Finished"*.

அதுவே அந்த _சரியான பெண்.. உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால்_ உங்கள் வாழ்க்கை *"Completely Finished"* என்றார்.

இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்...

Friday 3 March 2017

தெனாலிராமன்..









மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது” என்று கேட்டார்.

அதற்கு அவரது தாயாரும் “மாம்பழம் தான் வேண்டும்” என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம் வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.

மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.

அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் “மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்” என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.

புரோகிதர்களைச் சந்தித்தான். “என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்” என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.

புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.

இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.

பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் “ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்” என்று கேட்டார்.

“மன்னாதி மன்னா….. என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு” என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு “என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே” என்றார்.

இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்” என்றான்.

முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே…… அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே………………….”

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.

Thursday 2 March 2017

கவலை

எமதர்மராஜன் ஒரு குருவியை
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அடடா...
இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த
கருடபகவான்,

உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.

அந்த பொந்தில் வசித்து வந்த
ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில்
அந்த குருவியை விழுங்கிவிட்டது.

குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த
குருவிக்கே எமனாகி விட்டோமே என்று நினைத்து
கருடபகவான்,

குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.

“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்"

நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம்,

"அந்த குருவி சில நொடிகளில்
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
வசித்த ஒரு பாம்பின் வாயால்
இறக்க நேரிடும்" என எழுதப்பட்டிருந்தது;

அது எப்படி நிகழப் போகிறது?
என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்.

அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.

*_"வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே வாழ்வியல் நீதி!"_*

Wednesday 1 March 2017

தேவையா இது....


பையன் : Hi...

பொண்ணு : Helloooo...

பையன் : எங்க இருக்கீங்க?

பொண்ணு : நான் எங்க அப்பாவோட
BMW கார்ல
கோவிலுக்கு போயிட்டு, அதுக்கப்புறம்
ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்
பண்ணிட்டு கார வீட்ல
விட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல Chat பன்னிட்டு இருக்கேன்... ஓகேவா ?

பையன் : ஓகேங்க...

பொண்ணு : ஆமா,நீ எங்க
இருக்க?

பையன் : டவுன் பஸ்ல உங்க
பின்னால இருக்குற சீட்ல
தான் உட்கார்ந்துட்டு
இருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்க
வேண்டாம்னு சொல்லத் தான் Message பன்னேன்....

பொண்ணு : !!!!!!!!!!!! -
(இந்த அவமானம் உனக்கு தேவையாடி)
🙆🙆🙆🙆🙆🙆
பசங்களுக்கு இப்படிலாம் நடிக்க தெரியாது.
உண்மை! உழைப்பு! உயர்வு! இதான் பாய்ஸ்😝



Tuesday 28 February 2017

படிப்பு..


விருந்தாளி :- என்ன பண்ற

பையன் :- படிக்கிறேன்

விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :- என்னன்னு ?

பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம்

விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி

பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம்

விருந்தாளி :- அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி

பையன் :- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம்

விருந்தாளி :-அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி

பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம்

விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு

பையன் :- எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 1117கொடியிலேர்ந்து 40000கோடி வரை

விருந்தாளி :-.....!!! மயங்கி விழுகிறார்

பையன் :- -நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..

இதான் இந்த உலகம்..
இது சிரிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்ல..
சிந்திக்க வேண்டிய விஷயம்...

Sunday 26 February 2017

தமிழ் நாடு..



ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்...
😬😁😂😬😁😂😬😁😂
இது மாதிரி தான் தமிழ்நாடு அரசியல் இப்போ இருக்கு


தமிழ் நாடு..



ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்...
😬😁😂😬😁😂😬😁😂
இது மாதிரி தான் தமிழ்நாடு அரசியல் இப்போ இருக்கு


மாமனார்

என்னை போல 90% பசங்களின் அதிகபட்ச ஆசையே இம்புட்டுதானுங்க...

1..இரண்டு பெட்ரூம் ஓட ஓர் வீடு..
2..4 ஏக்கர் விவசாய நிலம்..
3..2 ஏக்கர் ல தென்னந்தோப்பு ..
4..ஸ்கார்பியோ
5..அன்பான மனைவி,அழகான இரு குழந்தைகள்..
6..அளவா வருமானம் வந்தாலும் சொந்தமா ஒரு தொழில்
7..கஷ்ட காலத்தில் தோள் கொடுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்..
8.. 2நாட்டு மாடு மற்றும் ஒரு காங்கேயம் காளை..
9..ஒரு *Yamaha RX100* பைக்
10..நாலு பேர் மதிக்கும் படியான வாழ்க்கை..
.
.
.
.
11.இதையெல்லாம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.கொடுக்க நல்ல *மாமனார்* 😜😜

.
சிரிக்க மட்டும்😳😂😂
.
சண்டைக்கெல்லாம் வர கூடாது ஆமா😃

Friday 24 February 2017

நை ஸ் லைன்ஸ்


Nice line...

தானாக உயரும்
*வயது*!
விடாமல் துரத்தும்
*காலம்*!!
தடுக்க முடியாத
*நேரம்*!!!
கடக்கத் துடிக்கும்
*இளமை*!!!!
காலைத் தடுக்கும்
*சமூகம்*!!!!!
தொடவேண்டிய
*இலக்கு*!!!!!!
இத்தனை போராட்டம் தான்
வாழ்க்கை....

Wednesday 22 February 2017

மிருக. வதை..


ஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் !!

யானையை பிள்ளையாராய் பிடித்து
சேவலை முருகன் கொடியில் வைத்து
காளையை நந்தியாக அமர்த்தி
பசுவை கோமாதாவாக வணங்கி
சிங்கத்தை சக்தியின் வாகனமாக்கி
புலியை ஐயப்பனின் நண்பனாக்கி
பாம்பை சிவனுக்கு மாலையாக்கி
கருடனை பெருமாளின் மகிழுந்தாக்கி
எருமையை எமனின் தேராக்கி
குரங்கை அனுமனாக கும்பிட்டு
நாயை பைரவனாக பார்த்து

கும்பிடும் கூட்டமய்யா நாங்கள் !!

Tuesday 21 February 2017

இந்தியன்



British: Can u Swim?
Indian: No
British: Then a Dog is Better den u because It Swims.
Indian: Can u Swim?
British: Yes! ஸ்ரீ
Indian: Then What's the Difference between u & Dog…
British Shocked, Indian Rocks! 👍 😜 😂 . . .
Britisher : Y u indians differ in colors, look we R all white..?
Indian: Horses r in different colors but donkeys r all the same..!



Monday 20 February 2017

இடுக்கண். வருங்கால்.. நகுக....


😅 சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் 😅
😅 ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 😅😅😅
😅
😅 ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான் 😅😅😅
😅
😅 ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 😅😅😅
😅 மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்... 😅😅😅
😅
😅 டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 😅😅😅
😅 வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 😅😅😅
😅
😅 கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???'' 😅😅😅
😅 டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!'' 😅😅😅
😅
😅 "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???" 😅😅😅
😅 "அது.... குருவி....!!!" 😅😅😅
😅
😅 ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? உங்களுக்குத் தெரியுமா.....??? 😅😅😅
😅 நண்பர்: தெரியுமாவாவது....??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். 😅😅😅
😅
😅 பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை." 😅😅😅
😅 வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது." 😅😅😅
😅
😅 ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்...??? 😅😅😅
😅 ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....??? 😅😅😅
😅
😅 (பரீட்சை ஹாலில்)
😅 ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா...??? 😅😅😅
😅
😅 முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...??? 😅😅😅
😅 ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!! 😅😅😅
😅
😅 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்.....!!! 😅😅😅
😅 கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!! 😅😅😅
😅
😅 இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான் 😅😅😅
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான் 😅😅😅
😅
😅 "கடலை எண்ணெய் என்ன விலைங்க...???" 😅😅😅
😅 "நூத்தி இருபது ரூவா"
😅 "எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...." 😅😅😅
😅
😅
😅
😅😅😅😅😅😅😅சிரிங்க சிரிங்க சிரிச்சுட்டே தூங்குங்க 😅😅😅😅😅😅😅😅😅

Sunday 19 February 2017

பொள்ளாச்சிக்காரன்..



👉💞👈நள்ளிரவு நேரம்......கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று ஊர் boyz பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

1. திண்டுக்கல்காரன்

2. திருச்சிகாரன்

3. பொள்ளாச்சிகாரன்

திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி
போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.

"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. "உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்.

அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள்
தோற்று போனதாய் அர்த்தம்.

"மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்...
திண்டுக்கல்காரன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
திருச்சிகாரன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.....

"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"

உடனே பொள்ளாச்சிகாரன் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ...

"இந்த தண்ணீரை கொண்டு வா!" என்றான்....பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்கள் பொள்ளாச்சிகாரன் மட்டும் தான்.,😀😄.....



Saturday 18 February 2017

மெண்டல்....



🏥மனநல மருத்துவமனை🏥

மென்டல் : டாக்டர், நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்..

டாக்டர் : அப்படியா!
எங்க அந்தக் கதைய சொல்லு..

மெண்டல் : முதல் பக்கம், ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு....

டாக்டர் : ம்ம்ம் அப்பறம்...

மெண்டல் : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு...

டாக்டர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்ன டா கதை...?

மெண்டல் : ராஜா குதிரைல போறாரு..... டக்...... டக்..... டக்..... டக்..... டக்............... டக்.......
டக்................. டக்................... டக்....................................டக்
டக்...........................................................டக்..............................
.......................டக்................................................
...................................
...................................
..........
டக்........டக்.........டக்..........டக்..........டக்...........டக்.

டாக்டர் : டேய்...
இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் மெண்டலு...

மெண்டல் : டாக்டர் இத whatsap la போடுங்க அங்க நெறைய மெண்டல் இருக்காங்க.... இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு மெண்டல் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு.....

😁😁😁😁😁😁😁😁😁😁😁

Thursday 16 February 2017

பத்தாது மனிதன்..



*தினந்தோறும் பார்க்கும் எதார்த்தம்*
கடவுள் வந்தார்...!
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்: “நான்  உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ *மனநிம்மதி, மன நிறைவு*… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..  சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,
அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன்,
கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்
*பத்தாவது* மனிதனா..?
இல்லை
*பத்தாது* என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..
*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.* 🍒


Wednesday 15 February 2017

நலம் நலமறிய ஆவல்



ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள். அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரிவிப்பதற்காக மொபைல் மூலம் SMS feed செய்து அனுப்பினாள். SMS தவறுதலாக கணவணுக்கு பதில் வேறொறு நபருக்கு சென்று விட்டது. அந்த மணிதர் அப்பொழுது தான் தண் இறந்து போன மணைவிக்கு இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார். அவர் அந்த SMS ஐ படித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ளHOSPITALல் ADMIT செய்தனர். அந்த SMSல் கீழே உள்ளபடி எழுதி இருந்து. நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது. நீங்கள் எண்ணை பற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் மணைவி




நலம் நலமறிய ஆவல்



ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள். அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரிவிப்பதற்காக மொபைல் மூலம் SMS feed செய்து அனுப்பினாள். SMS தவறுதலாக கணவணுக்கு பதில் வேறொறு நபருக்கு சென்று விட்டது. அந்த மணிதர் அப்பொழுது தான் தண் இறந்து போன மணைவிக்கு இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார். அவர் அந்த SMS ஐ படித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ளHOSPITALல் ADMIT செய்தனர். அந்த SMSல் கீழே உள்ளபடி எழுதி இருந்து. நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது. நீங்கள் எண்ணை பற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் மணைவி




Tuesday 14 February 2017

ரொம்ப கஷ்டம்பா...


லவ்,பண்றதுலாம் ரொம்ப கஷ்டம் பாஸ் ......!!
.
அவங்ககிட்ட ...
பேசிடே இருந்தா ,போடா " torcher " னு ,சொல்வாங்க...
பேசாம இருந்தா ,போடா " waste "ன் வாங்க ...!
.
*.மொரச்சா ,"கெட்டவன் "...
.சிரிச்சா ,"பல்"ல காட்றவன் ..
.
*. Di .. போட்டு ,பேசுனா .."limit ha cross panravan "..
...பேசாம ,இருந்தா .." டம்மி " பீஸ் " ...
.
*..தப்பா ,பேசுனா ," கெட்டவன் " ...
.." decent" ,ha ..பேசுனா .." tube light "....
.
*..சண்டை ,போட்டதும் ..போனாபோதுனு ,நம்பளே ,போய் ...பேசுனா .. " சொரனகெட்டவன்" ...
..பேசலனா .." Ego "..பிடிச்சவன்...
.
*..பையன் ..வேற பொண்ணுகிட்ட ,,பேசுனா .."துரோகமாம்" ..
..அதே ..பொண்ணுங்க ,வேற .பசங்க ,கிட்ட ..பேசுனா ... "Just friend" .. ஆம்....
..
.. ..பசங்கள... ஆண்டவன் .தான் ,,காபாத்தணும் ....
..........................................




Monday 13 February 2017

வாலண்டைன் டே..



Girl:காதலர் தின வாழ்த்து அட்டை இருக்கா

Shoper:இருக்கு மேடம்

Girl:நா உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன் னு இருக்கா

Shoper:இருக்கு மேடம்

Girl:ஒரு 12 கொடுங்க
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
good morning..

Sunday 12 February 2017

சிற்பம்


தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்"

அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாதது"

மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"

தந்தையிடம் பதில் இல்லை..........

படித்ததில் பிடித்தது



Thursday 9 February 2017

சசி வர்ணம்...


அர்ச்சகர்: சுக்லாம் ப்ரதம்
விஷ்ணும் சதுர்புஜம்
சசி வரணும்
சசி வரணும்
சசி வரணும்..

பக்தர்: சுவாமி சசி வந்தாச்சு..
அடுத்த மந்திரத்த சொல்லுங்கோ

தமிழ்நாடு ஸ்வாகா ☹☹☹☹



Wednesday 8 February 2017

ஹெட் மாஸ்டர்



ரசித்துச் சிரித்தேன்...

ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.

உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.

உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள.. கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை பெற்று கொள்" என்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான்.

உடனே அந்த பெண் அவனிடம், பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள்.

உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார்.

உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள்.

உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை" என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார்.

நீதி : அடேய்.. நீ LKG படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா...

Tuesday 7 February 2017

நான்யார்...












🌷 *நான் யார்* 🌷
ஜீவன்.

ஜீவன் என்றால்..?
ஆத்மா+அனாத்மா இவ்விரண்டும் இணைவது ஜீவன்......!!!

அனாத்மா என்றால்....???
மூன்று உடல்
ஐந்து கோசம்
மூன்று அவஸ்தை
இதுவே அனாத்மா......!!!

மூன்று உடல் என்றால்......???
காரண உடல்
சூட்சும உடல்
ஸ்தூல உடல்
மூன்றும் இணைந்தது.....!!!

காரண உடல் என்றால்.....???
ஆத்மா சார்ந்து நோக்கத்தினை வெளிபடுத்துவது......!!!

சூட்சும உடல்....???
மிக நீண்ட விளக்கமுள்ளது..,
சுருக்கமாய் ருசி. கேட்டறியும் திறன்., பார்வை.., வாசனை.., மனம், புத்தி இது போன்ற கண்ணுக்கு தெரியாத சக்தி, உடல் உணரக்கூடிய காந்த சக்தி........!!!

ஸ்துல உடல்......???
நீங்கள் கண்ணால் காணும் உடல்.......!!!

நான்
உடலல்ல
மனமல்ல
நான்
ஆத்மா......!!!

ஆத்மா என்றால்......???
உண்மையாகவும்
நிரந்தரமாகவும்
உள்ள அறிவாற்றல், அந்த அறிவாற்றலே இறையாற்றல், இதைஉணர்ந்து கொண்டால் நானே ஏகம் என்ற உண்மை விளங்கும்......!!!

வாழ்க வளமுடன்



Monday 6 February 2017

தர்மம் தலை காக்கும்..




படித்ததில் பிடித்தது:

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.





Wednesday 1 February 2017

ஏழ்மை....

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் #ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான்...
அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாபிடுகிரர்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் . நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக்கொண்டே சென்றான்...
மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று...
ஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே குடி கொண்டால் என்னதான் வசதி கிடைத்தாலும் ஏழ்மையிலுருந்து விடுதலை கிடைக்காது...!

கடவுளே.....

👳கணவன் : என்ன சமைச்சிருக்கே?
சாணி மாதிரி இருக்கு. நல்லாவேயில்ல.
.
.
.
👩மனைவி : கடவுளே! இவர் இன்னும்
என்னவெல்லாம்
சாப்பிட்டு பார்த்திருக்காரோ தெரியலையே!😜😜😜😜😜

Tuesday 31 January 2017

விலைவாசி.....

டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க... சரியா?

டீச்சர் : (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...

பையன்:(வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...

அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க.... சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.

*அப்பா* வந்ததும்: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...

*அப்பா*: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை... என்ன செய்யிறது?... சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க....
=========================

விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..

Thursday 26 January 2017

ஜோக்..



joke of d day....................................

Teacher - Can you please tell the name of 2 great Kings who have brought happiness & peace into people's lives ?”

Student :

“Smo-king & Drin-king ” !!!

Teacher Resigned !😂😂😇😇


Teacher: Who was Akbar ?
Boy: Akbar was Gay.

Teacher:- What, Are you mad ? Why did you say that?

Boy:- We have heard Laila - Majnu, Romeo-Juliet
But Only
Akbar - Birbal !
Teacher died😂😂😂

This 1 is a killer 1 .....

Teacher : students.. On britannia tiger biscuit cover,there is a green dot. Wat does that mean?

Student : tiger is online.. .😂😂

don't laugh alone share with frds 😜😝




Wednesday 25 January 2017

தவளை...

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

Tuesday 24 January 2017

வக்கீல்...



வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று கொண்டு இருந்தார்...
அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்தால்.. நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் உட்டார்... அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க... இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்... கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார... நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்... அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்...

அவர் தான் வக்கீல் ஆச்சே... அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்... அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ.... அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்... அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!! கொய்யால, யாருகிட்ட! 😜😜😜

நீதி:" PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT"
எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.

படித்ததில் பிடித்தது.




Monday 23 January 2017

அடமானம்



ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.

ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?”

அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

“அடமானமாய் என்ன தருவீங்க…?”

ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன..?”.

“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.

ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.

சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”

அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.
“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”.

ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.

“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.

ராக்கேஷ் யோசித்தான். ‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றான்.

ஆதிவாசி கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.

ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.

கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

“அடமானமாய் என்ன தருவீங்க…?”.



Sunday 22 January 2017

ராஜ தந்திரம்


படித்து சிரித்த கதை

எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார்.

மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது?

பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான்.

அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.



#பொண்டாட்டின்னா_எமனுக்கே_பயம்



Saturday 21 January 2017

நரியின் தந்திரம்..


🤗😱காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,
'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.
உடனே சிங்கம்,''முட்ட
ாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்
றது.
சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது
.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,
''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.
அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.😷



Friday 20 January 2017

கேள்வி..


கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

**.) கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி

**.) கில்லெட் ரேசரில் சவரம் செய்து

**.) ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும் லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து

**.) ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு

**.) ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்

**.) பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு

**.) மேகி நூடுல்சை சாப்பிட்டு,
நெஸ்கபே காபியை குடித்துவிட்டு

**.) ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு,

**.) சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து,

**.) வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,

**.) ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி

**.) மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு

**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,

**.) குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..

"இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???"

**கேட்டான் பார் ஒரு கேள்வி**

நன்றி

யாரோ....



Thursday 19 January 2017

காலம் மாறிப்போச்சு



காலம் மாறாமல் மாற்றியது நம்மை..........
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்
ஊரே அமர்ந்து பார்த்தோம்.
**
ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி
திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா
என ஏங்கி கிடந்தோம்.
**
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து
கொண்டு ஞாயிறன்று பார்த்த
படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.
**
தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல்
லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.
**
பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என
சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.
**
முழு ஆண்டு விடுமுறையில்
மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு
டூர் போனோம்.
**
ஒரே ஒரு ரூபாயைக் கையில்
வைத்துக்கொண்டு அன்று முழுவதும்
செலவு செய்தோம்.
**
100ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன்
கையில் வாங்கி பெருமூச்சு
விட்டோம்.
அனைவர் வீட்டிலும் உண்டியல்
இருந்தது.
**
பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக
நின்றுகொண்டே படம் முழுவதையும்
பார்த்து ரசித்தோம்.
**
பீரோக்கள் முழுவதும் சக்திமான்
ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு
பார்த்தோம்.
**
ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை
வளர்த்தோம்.
**
பொங்கலுக்கும் தீபாவளிக்கும்
கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து
நின்று தேர்வு செய்தோம்.
**
10வது 12வது ரிசல்ட் பார்க்க மாலைமுரசு விற்பனைக்
கடையின்
வாசலில் தவம் கிடந்தோம்.
**
15வயதுவரை டவுசர்களையே
அணிந்திருந்தோம்.
**
பழைய மாடல் கேசட்களில் பிலிம்
சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ்
பேனாவால் உள்ளே விட்டு சுத்தி
சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.
**
கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா
மாடல் கொண்டை போட்டு அழகுபார்த்தார்க
ள்.
**
பணக்கார வீட்டு கன்னிப்பெண்கள் BSA SLR
சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.
**
ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும்
மிட்டாய்களையும் போட்டு
வைத்தோம்.
**
நம் ஊரில் TVS-50 வைத்திருந்தவர்கள்
பணக்காரர்களாக இருந்தார்கள்.
**
கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும்
மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.
**
வசதிகள் குறைவு.....
மனங்களின் நெருக்கம் அதிகம்.....
அன்றையப் பொழுதின் அருமை அன்று தெரியவில்லை...,.
போன்சாய் கன்றுகளாய் வளராமலேயே இருந்திருக்கலாமோ.......
காலத்தின் கரங்களில் தாயக்கட்டைகளாய் நாம்...

மலரும் நினைவுகள்!!!!.



Wednesday 18 January 2017

ஸெல்ஃபி பொங்கல்


😜😜😜😜😜😜😜

என்னடி..
பொங்கலை
ரொம்ப நேரமா
கிளர்ற?
பொங்கல் வேகலையோ?

இல்லீங்க,
'செல்பி'
எடுக்கறப்போ
மொபைல்
உள்ள விழுந்திருச்சு...
அதைத்தான்
தேடிட்ருக்கேன்.



😀😀😀😀😀😀😀



Tuesday 17 January 2017

வெற்றி..

*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
*8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
*12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
*18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
*22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
*25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
*30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
*35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
*45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
*50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
*55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
*60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
*65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
*80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

Monday 16 January 2017

முனுசாமி



😇😇😇குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக் கொண்டு பாஸ்ட்டர் கூறினார்.

" உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டது. இன்றுமுதல் நீ பரிசுத்தமானவனாகிறாய், ''மோசஸ்' என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்யம் செய்துகொடு மோசஸ்".

"சத்யம் பாஸ்ட்டர் இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன், சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?"
"தாராளமாக எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்"

ஓகே பாஸ்ட்டர்.
மோசஸான குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் விஸ்கியை எடுத்து தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.

" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது. நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ 'சர்பத்' என்றழைக்கப்படுவாய். ஆமேன்... "😂😂😂



Thursday 12 January 2017

கடவுள்...



கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..

ஒரு நன்பர் நேரில் பார்த்த உண்மை சம்பவம்..!

ஒரு ஊரில் உள்ள சிறிய உணவகத்தில்..பள்ளி சீருடை அனிந்த
ஆறு வயது மதிக்கத்தக்க சின்ன பெண்(கையில் தூக்கு வாளியுடன்):

பெண் குழந்தை :-
பாட்டி ...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...
காசு நாளைக்கு தராங்களாம்...!

ஹோட்டல் நடத்தும் பாட்டி : -
ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லும்மா..இதில உனக்கு... தம்பிக்கு..உன் அம்மாவுக்கு..
எல்லோருக்கும் சேர்த்து '15 இட்லி வச்சிருக்கேன்
தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் பாட்டி .... (குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் அந்த
நனபர் மனதில் நினைத்ததை அந்த பாட்டியிடம் கேட்டார்...!

நன்பர் :
நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க பாட்டி ....!

பாட்டி :
அட சாப்பாடுதானே பா ....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல பா ...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலப-மாவா சம்பாதிக்க முடியுது....

நான்: ஏன் பாட்டி அவங்க வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல..!

பாட்டி :
குழந்தை கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க...
அவங்க கணவர் 'பக்கவாதம் வந்து வேலைக்கு போகமல் வீட்லதான்
இருக்காரு..! இவங்க அம்மாதான் கூலி வேலைக்கு போவும்.சில நேரம்
சாலை ஓரத்தில காய்-கரி வியாபாரம் செய்து கணவர் மற்றும் இரணடு
பிள்ளைகளை காப்பாற்றுது..!.
நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பலப் பா ... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் பா ...ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல்ல அதுதான் பா முக்கியம்....!

'கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..
இடலி பாட்டிதான் இந்த ஏழைகளின் கடவுள்...

இதை படிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!



பாட்டி உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை..
மாமனிதநேயமுள்ள உங்களை..உங்கள் பாதம் தொட்டு
வணங்குகிறேன்....!

நட்புடன் உங்கள் நண்பன் .



Wednesday 11 January 2017

பெயர் என்ன...

#ஹாஹாஹாஹா எனக்கே ப்ரஷ்ஸர் ஏறிடுச்சு.அப்போ அவருக்கு ஏறாதா என்ன.!!!
_________________________________________

ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சோதனை செய்ய கல்வி ஆய்வாளர்(CEO) ஒருநாள் திடீரென வந்தார்.அது ஒரு வீம்பு புடிச்ச பள்ளிக்கூடம் என்பதால் அந்த ஊர பத்தி ஏற்கனவே நிறைய பேர்கிட்ட விசாரிச்சிட்டு வந்துள்ளார்.பிறகு ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆய்வாளர்.அவர பாத்ததும் பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க.

சரி இந்த பசங்ககிட்ட பாடம் சம்பந்தமா கேள்விலாம் கேக்க வேணாம்.முதல்ல இவங்கள பத்தி கேப்போம்னு நினச்சு ஒரு பையன எழுப்பினார்.

CEO : உன் பேர் என்ன?

BOY-1 : பழனி

CEO : உன் அப்பா பேரு?

BOY-1 : பழனியப்பா

(அடுத்தப் பையன எழுப்பி)

CEO : தம்பி உன் பேர் சொல்லு?

BOY-2 : மாரி

CEO : உன் அப்பா பேரு ?

BOY-2 : மாரியப்பா

(சிறிய சந்தேகத்துடன் அடுத்தப் பையன எழுப்பி)

CEO : உன் பேர் சொல்லு தம்பி?

BOY-3 : பிச்சை

CEO : உன் அப்பா பேரு?

BOY-3 : பிச்சையப்பா

இப்போ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்கனு புரிஞ்சுகிட்டாரு.கொஞ்சம் உஷாரா அடுத்த பையன்கிட்ட கேள்வியே மாத்தி கேட்டாரு

CEO : தம்பி,நீ முதல்ல உன் அப்பா பேரைச் சொல்லு?

BOY-4 : ஜான்

CEO : இப்பொ உன் பேரைச் சொல்லு ?

BOY-4 : ஜான்சன்

(கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,)

CEO : உன் அப்பா பேர சொல்லு,

BOY-5 : தாசன்

CEO : சரி உன் பேரு என்ன?

BOY-5 : காளிதாசன்

(கொலவெறி ஆயிட்டாரு நம்ம ஆய்வாளர்.பிறகு
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,வித்யாசமா கேள்வி கேட்டாரு)

CEO : உன் தாத்தா பேர சொல்லுடா?

BOY-6 : மணி

CEO : சரி அப்பா பேரு?

BOY-6 : ரமணி

CEO : உன் பேரு?

BOY-6 : வீரமணி

(ஆய்வாளருக்கு லேசாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது.நெஞ்சில் கை வைத்து பிடித்துக்கொண்டே கடைசி பையனிடம் கேட்டார்)

CEO : உன் தாத்தா பேர் என்னடா?

BOY-7 : தீன்

CEO : உன் அப்பா பேரு?

BOY-7 : மொய்தீன்

CEO : உன் பேருருரு? (லேசாக மயங்குகிறார்)

BOY-7 : ஹாஜா மொய்தீன்

அப்புறம் என்ன.! அந்த ஆய்வாளர் நெஞ்சுவலி வந்து கீழ விழுந்துட்டார்.ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போயிட்டாங்க.அதோட அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வர்றதே இல்ல.

😜😝🍼

Tuesday 10 January 2017

குதிரைக்காரன்



🎅 பெரிய குரு இருந்தார்.

🚫 முற்றும் துறந்தவர்.

✅ எல்லாம் கற்றவர்.

📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.

🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.

🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.

☔ அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.

🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.

🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.

👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

☝ ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.

🙏 ‘அய்யா! நான் குதிரைக் காரன் 🏇

❗எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க 😒

👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.

🐎 நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

🌾 புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க ❗

👮 நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான்.

👋 பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.

🏇 அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,
அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.
🔣 தத்துவம்,
🔠 மந்திரம்,
🚫 பாவம்,
✅ புண்ணியம்,
🌁 சொர்க்கம்,
🔥 நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.

🎤 பிரசங்கம் முடிஞ்சுது.

✴ ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

🙏 ‘அய்யா… நான் குதிரைக்காரன்.
😳 எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
👌 ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…

🌾 நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு 🐎 குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.
🔢 முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான் 😨

😱 அவ்ளோதான்❗
😰 குரு தெறிச்சிட்டார்!

© நீதி:
✊ மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் ✅

👼 புரியாத,
😇 தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் .........😂😂😂




Monday 9 January 2017

வெண்ணை..



ஹோட்டல் முதலாளி: புதுசா ‍‍வேலைக்கு சேர்ந்த அரவை மாஸ்டரிடம், இங்க பாருப்பா மாவு நல்லா நைசா அரைக்கனும் தெரியுதா?

சரிங்க முதலாளி அப்படியே அரைச்சுடறேன்னு சொல்லிட்டு அரைச்ச மாவை முதலாளி கிட்ட காமிச்சா, பரவாயில்லை ஆனா இன்னும் நைசா அரைக்கனும்..

அடுத்த நாள் கூடுதலா நேரம் எடுத்து கிரைண்டர்ல அரைச்சு கொண்டுவந்து முதலாளிகிட்ட காட்றாரு. நேத்தையவிட இன்னைக்கு பரவாயில்ல. நாளைக்கு அரைக்கிற மாவு வெண்ணைய் மாதிரி நைசா இருக்கனும்கிறார்..

இது என்னடா இவ்வளவு நைசா அரைச்சும் முதலாளிக்கு திருப்தியா இல்லையேன்னுட்டு, சரி இன்னைக்கு ஒரு ‍வேலை பண்ணுவோம் முதலாளி இதுக்கு என்ன சொல்றாருன்னு பாப்போம்னு மாவு அரைச்சு முடிச்சதுக்கப்புறம் முதலாளிகிட்டே கொண்டுபோய் காட்றாரு.. இன்னப்பா நேத்து அவ்வளவு சொல்லியும் மாவு வெண்ணைய் மாதிரி நைசா அரைக்கலை யேன்னுட்டார் முதலாளி..

இன்னையோட நான் என்வேலையை ராஜினாமா பண்றேன்முதலாளி, ஏன்யா வந்த 3 நாள் தானே ஆகுது என்ன பிரச்சனை உனக்கு, எனக்கு இங்க சரிப்பட்டு வராது, ஏன் என்னய்யா ஆச்சு?

முதலாளி நானும் மாவை நைசா அரைச்சு கொண்டுவந்து 2 நாளா காமிச்சேன். உங்களுக்கு திருப்திப்படலே. இன்னைக்கு வெண்ணையே கொண்டுவந்து அரைச்ச மாவுன்னு காமிச்சேன் அப்பவும் நீங்க வெண்ணைய் மாதிரி இருக்கனும்னு சொல்றீங்க, இதுக்கு மேல உங்கள திருப்திப்படுத்தமுடியாது கிளம்பறேன்னு சொல்லிகிளம்பிட்டார்..

மனிதனை உற்சாகப்படுத்துவது சிரிப்பு.. கவலைகளை மறக்கச் செய்வது சிரிப்பு..உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது சிரிப்பு.. சிரிப்போம். மற்றவர்களை சிரிக்கவைப்போம்..😂😂😂😀😀😀😀😀




Sunday 8 January 2017

பூனக்குட்டி..


படித்ததில் பிடித்தது




நண்பனுடன்
அவனது வீட்டிற்குச்
சென்றிருந்தேன்..
வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக் கட்டிலில்
கிடந்தார்..

நண்பன் உள்ளே
போய்விட்டான்..
நான் : என்ன பாட்டி
நல்லா
இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன்
ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன்
பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்க
ஃபோனு..
சட்டென்று ஞாபகம்
வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக் காட்டினேன்..

பாட்டி: இதுகிட்ட
பேசினா
அத அப்புடியே திரும்ப
பேசும்..

பாட்டி : என்ன
ராசா சொல்றே..?

Talking Tom :என்ன
ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking
Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
சென்றேன்..

எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில்
வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன்
பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா..
அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன
பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல
இங்க
எங்கிட்ட யாருமே பேச
மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த
பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

நண்பனைப் பார்த்தேன்..

யாருடனோ (!)
ரகசியமாய்ப்
பேசிக்கொண்டு
இருந்தான்..

நா சாப்ட்டேன் செல்லம்..
நீ செல்லம்..?
Ok செல்லம்....
நா வீட்ல இருக்கேன்
செல்லம்....
அப்புறமா பேசுறேன்
செல்லம்..
???????????