Followers

Followers

Thursday 2 June 2016

ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும்
போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார் .......


ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ...
அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .
அதற்க்கு பின்னால் ஒரு மனிதன்
கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..🐕

அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200
ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .🚶🏼🚶🏼🚶🏼

இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம் ..
அடக்க முடியவில்லை .
அவர் கருப்பு நாயுடன்
நடந்து கொண்டிருந்தவரிடம்
சென்று,

என்னை மன்னிக்கவும் ...

உங்களை disturb
செய்வதற்கு ...

ஆனால் இந்த
மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என்
வாழ்கையில் பார்த்தது இல்லை ..

எல்லோரும்
ஒரே வரிசையில் உங்கள் பின்னால்
வருகிறார்கள்.,...

இது யாருடைய
இறுதி ஊர்வலம் ......

☝🏽முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது....

என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ??

என்னுடைய நாய்
அவளை கடித்து கொன்று விட்டது ...

✌🏾இரண்டாவது சவப்பெட்டி ??

என்னுடைய மாமியாருடையது !!

அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது ...


ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார்

"இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர
முடியுமா "


(அதற்க்கு அவர் சொன்ன பதில்)
.
.
.
.
.
.
.
பின்னால் வரும் வரிசையில் போய்
நில்லுங்கள் !
😄😄😄😄😄😄😄😄

2 comments:

  1. ஆஹா, ஏற்கனவே படித்துள்ளதுதான் என்றாலும் மீண்டும் படிக்க எனக்கு அலுக்கவே இல்லை. நல்ல நகைச்சுவை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஸார்

    ReplyDelete