Followers

Followers

Thursday 4 August 2016

என்னம்மா இப்பூடி பண்றிங்களேம்மா


ஒரு பொண்ணு டெய்லி காலெஜுலெர்ந்து வரும்போது ஒருத்தன்
பின்னாடியே வரதக் கவனிச்சுச்சு ...
வீட்டுக்குள்ள போயி மூஞ்சி கழுவி ட்ரஸ்
மாத்திக்கிட்டு வந்து பாத்தா அவன்
அங்கேயே நின்னுக்கிட்டு செல்போன
நோண்டிக்கிட்டு இருக்கான்....
ஒருவாரம் ஆயிருச்சு.... தினமும்
அதே கதை தான்.

பொண்ணு யோசிச்சது " அம்மாப்பாட்டச்
சொல்லிறலாமா?"
"இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப்
பாப்போம்..."
ஒரு மாசம் தாண்டிருச்சு... கதை ரிப்பீட்டு...
ஒரு நண்பியக் கூட்டிக்கிட்டு வந்து அவனக்
காமிச்சுக் கதை சொல்லிச்சு அந்தப் பெண்...
பிரெண்டு " மூணு மாசம் வரைக்கும் பாரு...
பையன் நல்லா இருக்கான்.... வீட்டுல சொல்லிக்
கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம்"
ன்னு சொல்லிச்சு...

பெண்ணு மனசுக்குள்ள
ஒரு கிளுகிளுப்பு ஓட ஆரம்பிச்சிருச்சு....
நண்பியோடு கூடச் சேர்ந்து அவன் வேலை,
குடும்ப விபரம் எல்லாம்
கண்டு பிடிச்சு முடிச்ச போது ஒரு வருஷம்
தாண்டிருச்சு....
அப்பாம்மாட்டச் சொல்லிருச்சு.... அவங்களும்
கலியாணம் பேசி முடிச்சிரலான்னு
சொல்லி ஊர்லேர்ந்து பெரியவங்களக்
கூட்டிட்டு வந்து மொறைப் படி வரன் கேக்கப்
போக ரெடியானாங்க....

சந்தோசம் தாங்காமப் பொண்ணு அன்னைக்குச்
காலைல கோயில் போயிட்டு வரும்போது
அவன் கிட்டப் போயி
"ஒரு வருஷத்துக்கு மேலா என்ன
பாலோ பண்ணுறீங்க...
சின்சியரா வீட்டு முன்னாடி நின்னு பாக்குறீங்க....
ஆனாலும் ஒரு தப்புத் தண்டாவான
விஷயமெல்லாம் பண்ணலை.... அதுனால நான்
வீட்டுல சொல்லி, உங்க வீட்டுல சம்பந்த பேச
நாளைக்கு என்னோட அப்பாம்மா வராங்க... உங்க
வீட்டுல எந்தத் தடையும் சொல்ல
மாட்டாங்கன்னும் கண்டு பிடிச்சிட்டேன்.... ஐ
லவ் யூ டா கண்ணா" ன்னுச்சு...

அவன் அதுக்கு
"அடாடா... நான் உங்க
வீட்டுவாசல்ல உங்களுக்காகக்
காத்து நிக்கலை...உங்க வீட்டு WI-FI ல நீங்க
பாஸ் வேர்டு போடலை... அதுனால
ப்ரீயா டவுன்லோடு பண்ணத்தான் வரேன்..."
ன்னு சொல்லிட்டு எடுத்தான் பாருங்க ஓட்டம்...

என்னம்மா...... இப்படி பண்றீங்களேமா....🏃🏃🏃🏃🏃


6 comments:

  1. மிகவும் சுவாரஸ்யமான கதையாக உள்ளது. ரஸித்தேன். சிரித்தேன். பகிர்வுக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

    ReplyDelete
  2. ஹா ஹா.. நல்ல காமெடிதான் இந்த ஆண்ட்ராய்ட் போன் வந்தாலும் வந்தது ஆளுகளை பைத்தியமா அடிக்குது....

    ReplyDelete
  3. எப்பவும் கோபால் ஸார் மட்டுமே என் பதிவு பக்கம் வந்து ரசித்து கமெண்ட் போடுவாங்க... இன்னைக்கு அதிசயமா சிப்பிக்குள் முத்து வங்களும் வந்திருக்காங்க... இருவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  4. நானும் உங்க பக்கம் இன்றுதான் வருகிறேன் மொபைல்ல நெட்ல எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ அதுபோல தேவையில்லாத விஷயங்களும்.. நிறையவே இருக்குதான்.. நாமதான் நல்லதை தேடி போகணும்.. பதிவு நல்லா இருக்கு..

    ReplyDelete
  5. ம.. வாங்க வாங்க கூட ரெண்டு பேரு வந்து கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்தினாலே சந்தோஷமாதான் இருக்குது.. நன்றிங்க...

    ReplyDelete
  6. எல்லா பதிவுமே நல்லா இருக்கு... ஏற்கனவே எங்கியோ படித்தது போலவே தோணுது...

    ReplyDelete