Followers

Followers

Wednesday 21 September 2016

மாங்கா மடையன்


இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள். ராத்திரி அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார்.
சீனியர் : பையா .. .. வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ?
கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார்

ஜூனியர் : பாஸ் வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ? அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம் நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச் சொல்வேன் .. .. .
ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக,
சீனியர் : முட்டாளே .. நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. .. அது உன் மரமண்டைக்குப் புரியலியா .. .. ? என்று சீறினார் சீனியர்.



3 comments:

  1. //நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. .. //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ... அதனால்தான் வானமே தெரிகிறது.

    நல்லதொரு நகைச்சுவைப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. You may like to go through the following Link:

    http://gopu1949.blogspot.in/2016/09/1.html

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்

    ReplyDelete