Followers

Followers

Wednesday 2 November 2016

வாய் கொடுக்க கூடாது..

மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்ககூடாது".

ஓட்டலில் சாப்பிட சென்றவரின் நிலைமையை பாருங்க

SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?

CUSTOMER : தோசை வேணும்.

SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?

CUSTOMER : வெங்காய தோசை.

SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?

CUSTOMER : சின்ன வெங்காயம்.

SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?

CUSTOMER : நாட்டு வெங்காயம்.

SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?

CUSTOMER : சின்னதா நறுக்குனது.

SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?

CUSTOMER : அதிகமா.

SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?

CUSTOMER : அறுத்துட்டே போடு.

SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?

CUSTOMER : சிவப்பு.

SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?

CUSTOMER : அதிகமா உள்ளது.

SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?

CUSTOMER : உரம் போடாதது.

SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?

CUSTOMER : கழுவிட்டு போடு.

SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?

CUSTOMER : நல்லா வேகணும்.

SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?

CUSTOMER : நெய்.

SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?

CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.

SERVER : சரி சார். இருங்க கொண்டு வாறேன்.

(சாப்பிட்ட பிறகு)

SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.

CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா?

SERVER : கேஷ்

CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா?

SERVER : நோட்டா தாங்க.

CUSTOMER : பழைய நோட்டா? புதிய நோட்டா?

SERVER : புதியது.

CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா?

SERVER : காந்தி படம் போட்டது.

CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?

SERVER : கண்ணாடி போட்டது.

CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?

SERVER : சாதா கண்ணாடி.

CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?

SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மன்னிச்சிடுங்க. உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன். நீங்க போங்க சார். நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.

CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்ககூடாது.

3 comments:

  1. நல்லா இருக்கு.

    பசி வேளையில் இதுபோல சர்வர் எவனாவது கேள்வி மேல் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தால் எரிச்சலாகத்தான் வரும். :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

    மேற்படி பதிவையும், அதிலுள்ள பின்னூட்டங்களையும்
    தாங்கள் ஒருவேளை படிக்க விரும்பலாம்.

    இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

    இப்படிக்கு கோபு

    ReplyDelete